திருவருட்பா
முதல் திருமுறை
காப்பு
குறள்வெண்பா
திருச்சிற்றம்பலம்
1. சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்
பேர்சான்ற இன்பம் பெரிது.
2. ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
பேறு மிகத்தான் பெரிது.
கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்
1. பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்
எந்நாளும் வாழியநீ என்னெஞ்சே – பின்னான
2. இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை
எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே – செப்பமுடன்
3. செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற
இவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே – எவ்வெவ்
4. உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்
இலகும் சிவமாய் இறையாய் – விலகும்
5. உருவாய் உருவில் உருவாய் உருவுள்
அருவாய் அருவில் அருவாய் – உருஅருவாய்
6. நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் – முத்தியருள்
7. ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
நன்றாய் நவமாய் நடுநிலையாய் – நின்றோங்கும்
8. வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர
நாதமாய் நாதாந்த நாயகமாய் – ஓதும்
9. செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்
அறிவாய் அறிவுள் அறிவாய் – நெறிமேவு
10. காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்
சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் – ஞாலம்
11. பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்
பெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் – திருந்தாத
12. போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் – நீக்கமிலா
13. ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற
சோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் – நீதியாய்
14. ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்
ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் – பாங்கான
15. சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் – வித்தமாய்
16. அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா
கண்டமாய் ஆனந்தா காரமதாய் – அண்டத்தின்
17. அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்
எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் – செப்பாலும்
18. நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்
அஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் – எஞ்சாப்
19. பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்
தரமாய்ப் பரப்பிரமம் தானாய்-வரமாய
20. ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்
அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் – இன்பாய்
21. அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
சகமாய்ச் சகமாயை தானாய் – சகமாயை
22. இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்
கொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் – எல்லார்க்கும்
23. நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்
எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் – எண்ணுகின்ற
24. வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்
தானாய் வழிபடுநான் தான்தானாய் – வானாதி
25. ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
மன்றிடத்தில் என்றும் வதிவதாய் – ஒன்றியதோர்
26. ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்
எந்நிறமும் வேண்டா இயனிறமாய் – முந்நிறத்தில்
27. பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் – பூப்பதின்றி
28. வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்
நீளாது நீண்ட நிலையினதாய் – மீளாப்
29. பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
அரிதாய் அரிதில் அரிதாய்த் – துரிய
30. வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் – தெளியாதி
31. கற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்
நிற்பதா கார நிருவிகற்பாய்ப் – பொற்புடைய
32. முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்
எச்சுடரும் போதா இயற்சுடராய் – அச்சில்
33. நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்
மறைவாய் வெளியாய் மனுவாய் – மறையாத
34. சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்
விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் – மெச்சுகின்ற
35. யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ
போகமாய்ப் போகியாய்ப் போகமருள் – ஏகமாய்க்
36. கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் – மாவலத்தில்
37. காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்
சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் – மாட்சிபெறச்
38. செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்
உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் – மொய்கொள்
39. அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
கதுவாது நின்ற கணிப்பாய்க் – கதுவாமல்
40. ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்
பொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் – செய்யென்ற
41. ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்
சார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் – பார்வினையில்
42. ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்
சார்பால் மயங்காத் தகையினராய்ச் – சார்பாய
43. ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்
பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் – நீரிடத்தில்
44. தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த
ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் – வெண்மையிலா
45. ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்
என்றும் இரண்டென்ப தில்லவராய் – மன்றவொளிர்
46. அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் – தம்மூன்றி
47. வீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை
நாடாது நான்கும் நசித்தவராய் – ஊடாக
48. எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்
அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் – எஞ்சாமல்
49. ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்
ஆண்டாண்டு கண்டா றகன்றவராய் – ஈண்டாது
50. வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ
டேழியற்ற ஏழும் இகந்தவராய் – ஊழியற்றக்
51. கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்
எட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற
52. தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் – மான்றமலத்
53. தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் – தனுவொழிந்து
வாக்கொழிந்து மாணா மனமொழிந்து – ஏக்கமுற
54. வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து
சாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து – நீக்கொழிந்து
55. நானுமொழி யாதொழிந்து ஞானமொழி யாதொழிந்து
தானும் ஒழியாமற் றானொழிந்து – மோனநிலை
56. நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்
நிற்கும் பரம நிருத்தனெவன் – தற்பரமாய்
57. நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து
சென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் – வன்தீமை
58. இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்
வல்லான் எவனந்தி வண்ணனெவன் – கல்லாலில்
59. சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்
விட்டகன்ற யோக வினோதனெவன் – மட்டகன்ற
60. அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்
திண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் – பண்டங்கு
61. வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்
தேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் – யாயாதும்
62. வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்
தீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் – ஈண்டோது
63. பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்
சிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் – மற்றுருவின்
64. வையாது வைத்துலகை மாவிந் திரசாலம்
செய்யாது செய்விக்கும் சித்தனெவன் – நையாமல்
65. அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்
செப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் – ஒப்புறவே
66. நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்
செல்லாது வைக்கின்ற சித்தனெவன் – பொல்லாத
67. வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் – தம்பாங்கர்
68. ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்
திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் – வண்கையுடைத்
69. தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை
தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் – ஊனமின்றிப்
70. பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்
சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் – போர்த்துமிக
71. அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்
சில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் – பல்வகையாய்க்
72. கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்
செய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் – உய்கருவை
73. மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்
செய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் – உய்விக்கும்
74. வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்
சித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் – சத்துடனே
75. உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்
சிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் – பற்பலவாம்
76. காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்
சேரூழி நிற்கவைத்த சித்தனெவன் – பேராத
77. நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்
சீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் – பாராதி
78. ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே
சிந்தையுற நின்றருளும் சித்தனெவன் – பந்தமுற
79. ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் – மாண்பண்ணாப்
80. பேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்
சேடாகச் செய்யவல்ல சித்தனெவன் – சேடாய
81. வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்
திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் – ஒண்மையிலா
82. ஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச்
சேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் – காட்டிலுறு
83. காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்
தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் – வாஞ்சையுற
84. நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்
சீரணவச் செய்யவல்ல சித்தனெவன் – பேரணவக்
85. கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்
செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் – செம்மையிலா
86. வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்
செம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் – அம்புலியை
87. அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற
செங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் – துங்கமுறா
88. ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்
சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் – வீரமுடன்
89. முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்
சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் – முன்னயன்மால்
90. மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு
சிற்றுரும்பை85 நாட்டிநின்ற சித்தனெவன் – மற்றவர்போல்
91. அல்லா அயனும் அரியும் உருத்திரனும்
செல்லா நெறிநின்ற சித்தனெவன் – ஒல்லாத
92. கல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச்
செல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் – அல்லலறப்
93. பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்
சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் – மார்க்கங்கள்
94. ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்
சென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் – அன்றொருநாள்
95. கல்லானை தின்னக் கரும்பளித்துப் பாண்டியன்வீண்
செல்லா தளித்தமகா சித்தனெவன் – சொல்லாத
96. ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
சென்றே நடுநின்ற சித்தனெவன் – சென்றேறும்
97. அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்
சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் – எத்தலத்தும்
98. சங்கமதே86 தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்
செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் – தங்குகின்ற
99. சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் – தத்தெல்லாம்
100. நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை
காட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் – பாட்டோடு
101. வண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள்
கண்டாலும் காணாத கள்வனெவன் – தொண்டாக
102. அள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்
கள்ளம் செறியாத கள்வனெவன் – எள்ளலறக்
103. கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்
கண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் – கொண்டுளத்தில்
104. தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்
கன்னமிடக் கைவந்த கள்வனெவன் – மண்ணுலகைச்
105. சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்
கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் – முற்படுமித்
106. தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்
கண்டுலவு கின்றதொரு கள்வனெவன் – விண்டகலா
107. மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்
கண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் – உண்மயக்கு
108. மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய
காசு பறிக்கின்ற கள்வனெவன் – ஆசகன்ற
109. பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்
கண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் – எண்ணாது
110. நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்
தானென்று நிற்கும் சதுரனெவன் – மானென்ற
111. மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்
சாயைதனைக் காட்டும் சதுரனெவன் – நேயமுடன்
112. நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்
தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் – வான்மறையாம்
113. முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்
தன்னை மறைக்கும் சதுரனெவன் – உன்னுகின்றோர்
114. சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்
சத்தத்திற் காட்டும் சதுரனெவன் – முத்தரென
115. யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும்
தேவர் புகழ்தலைமைத் தேவனெவன் – யாவர்களும்
116. இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்
செவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் – மெய்வணத்தோர்
117. தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ
நாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் – தாம்வாழச்
118. சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்
சீருருவே ஓருருவாம் தேவனெவன் – ஈருருவும்
119. ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்
சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் – என்றென்றும்
120. தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்
சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் – பிற்படுமோர்
121. பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்
கைவிட் டுணர்வே கடைப்பிடித்து – நெய்விட்ட
122. தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்
பூப்போலும் தன்தாள் புணைபற்றிக் – காப்பாய
123. வெண் றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்
கண்ர் அருவி கலந்தாடி- உண்ர்மை
124. என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி
அன்புருகி அன்புருவம் ஆகிப்பின் – வன்பகன்று
125. புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்
கண்ணியா எங்கள் களைகண்ணே – எண்ணியாங்
126. கன்பர்க் கருளும் அரசே அமுதேபே
ரின்பக் கடலே எமதுறவே – மன்பெற்று
127. மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே
ஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் – போற்றிநின்றால்
128. உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்
அள்ளூறி அண்ணித் தமுதூறித் – தெள்ளூறும்
129. வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்
தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் – வான்போனார்
130. மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்
நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் – நாண்மலர்பெய்
131. தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் – சீர்த்திபெற
132. ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று
காண்டற் கரிதாம் கணேசனெவன் – வேண்டுற்றுப்
133. பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட
காமியங்கள் ஈயும் கணேசனெவன் – நாமியங்க
134. ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்
காண எமக்கீயும் கணேசனெவன் – மாணவரு
135. முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்
தந்த அருட்கடலாம் சாமியெவன் – தந்தமக்காம்
136. வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்
கோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் – தீதகற்றித்
137. தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்
கங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் – எங்குறினும்
138. கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற
பாம்பா பரணப் பரமனெவன் – கூம்பாது
139. போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்
கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் – ஆற்றலுறு
140. வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்
ஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் – ஐயந்தீர்
141. வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்
எல்லாம் உடைய விதத்தனெவன் – எல்லார்க்கும்
142. தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் – போந்துயிர்கள்
143. எங்கெங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும்
அங்கங் கிருந்தளிக்கும் அண்ணலெவன் – புங்கமிகும்
144. அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த
கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் – மண்ணிடத்தில்
145. ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்
தாயாகி வந்த தயாளனெவன் – சேயாக
146. வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்
தாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் – பாற்குடத்தைத்
147. தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்
தான்தந்தை ஆன தயாளனெவன் – தான்கொண்டு
148. சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த
சம்பு முனிக்கீயும் தயாளனெவன் – அம்புவியில்
149. ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்
தாண்டவம்செய் கின்ற தயாளனெவன் – காண்தகைய
150. முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு
முத்தைத் தனிவைத்த முத்தனெவன் – பத்திபெறு
151. நாவொன்றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில்
வாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் – பூவொன்று
152. நன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால்
வன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் – நன்றொண்டின்
153. காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை
மாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் – தாணிற்கும்
154. தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது
மன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் – முன்னன்பில்
155. சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்
மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் – மான்முதலோர்
156. தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் – ஆமவனே
157. நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்
செம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் – எம்மையினும்
158. நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்
தேடக் கிடையாநம் தெய்வங்காண் – நீடச்சீர்
159. நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்
செல்வந் தருநமது தெய்வம்காண் – சொல்வந்த
160. எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்
திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் – வண்மையுற
161. முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்
செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் – தப்பாது
162. தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்
சேரா நெறியருள்நம் தேசிகன்காண் – ஆராது
163. நித்தம் தெரியா நிலைமே வியநமது
சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் – வித்தரென
164. யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்
தீதென் றறிவித்த தேசிகன்காண் – கோதின்றி
165. ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை
ஆசை யுடனீன்ற அப்பன்காண் – மாசுறவே
166. வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்
அன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் – இன்பாக
167. இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை
அப்பா எனும்நங்கள் அப்பன்காண் – செப்பாமல்
168. எள்ளித் திரிந்தாலும் இந்தா87 என் றின்னமுதம்
அள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் – உள்ளிக்கொண்
169. டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்
கன்றே அருளுநம தப்பன்காண் – நன்றேமுன்
170. காதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய
ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் – கோதுறுமா
171. வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே
அஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் – துஞ்சலெனும்
172. நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்
அச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் – நிச்சலுமிங்8
173. கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை
ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் – சேயிரங்கா
174. முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்
அன்னையினும் அன்புடைய அப்பன்காண் – மன்னுலகில்
175. வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை
நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் – இம்மைதனில்
176. அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது
நன்றிரவில்சோறளித்த நற்றாய்காண் – என்றுமருட்
177. செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது
நம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் – சும்மையென
178. மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்
நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் – மூளுகின்ற
179. வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் – செந்நெறியின்
180. நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் – ஆம்தோறும்
181. காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்
ஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் – சாலவுறு
182. வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்
நம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் – அம்புவியில்
183. வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்
நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் – எந்நீரின்
184. மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய
நாலா யிரம்தாயில் நற்றாய்காண் – ஏலாது
185. வாடியழு தாலெம் வருத்தம் தரியாது
நாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் – நீடுலகில்
186. தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்
நான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் – வான்பாடும்
187. ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்
கானமணம் செய்விக்கும் அம்மான்காண் – தேனினொடும்
188. இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்
டன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் – வன்பாவ
189. ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்
சூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் – வீழ்குணத்தால்
190. இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்
துன்பம் துடைக்கும் துணைவன்காண் – வன்பவமாம்
191. தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்
தூநெறியைக் காட்டும் துணைவன்காண் – மாநிலத்தில்
192. இன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத்
தொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் – தொன்றுதொட்டே
193. ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த
நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் – பேயரென
194. வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு
நீங்காத நம்முடைய நேசன்காண் – தீங்காக
195. ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை
நீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் – கூட்டுலகில்
196. புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு
நில்லென் றிருத்துகின்ற நேசன்காண் – சில்லென்றென்
197. உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு
நிட்டூரம் செய்யாத நேசன்காண் – நட்டூர்ந்து9
198. வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்
நெஞ்சிலது வையாத நேசன்காண் – எஞ்சலிலாப்
199. பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்
நேர்நின் றளித்துவரு நேசன்காண் – ஆர்வமுடன்
200. ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் – சேர்ந்துமிகத்
201. தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்
கோபஞ் செயாநமது கோமான்காண் – பாபமற
202. விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் – உள்ளமுற
203. உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே
கொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் – மண்டலத்தில்
204. ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்
சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் – முன்தாவி
205. நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து
தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் – மாடிருந்து
206. நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்
சேமித்த வைப்பின் திரவியம்காண் – பூமிக்கண்
207. ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா
தோங்கருளால் நம்மை உடையவன்காண் – ஆங்கவன்தன்
208. கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல்
திங்கட் கொழுந்தின் திருவழகும் – திங்கள்தன்மேல்
209. சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் – தேர்ந்தவர்க்கும்
210. நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் – தேக்குதிரி
211. புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்
கண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் – தொண்டர்கள்தம்
212. நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
நாசித் திருக்குமிழின் நல்லழகும் – தேசுற்ற
213. முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
எல்லை வளர்செவ் விதழழகும் – நல்லவரைத்
214. தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
வாவென் றருளுமலர் வாயழகும் – பூவொன்றும்
215. கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்
தேன்பரவும் வள்ளைச் செவியழகும் – நான்பரவி
216. வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது
கேட்டருளும் வார்செவியின் கேழழகும் – நாட்டிலுயர்
217. சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்
தெய்வ முகத்தின் திருவழகும் – தெய்வமுகத்
218. துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்
கொள்ளும் கருணைக் குறிப்பழகும் – உள்ளறிவின்
219. எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்
தெள்ளார் அமுதச் சிரிப்பழகும் – உள்ளோங்கும்
220. சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்
நீல மணிமிடற்றின் நீடழகும் – மாலகற்றி
221. வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்று
சூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் – தாழ்ந்திலவாய்த்
222. தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு
மானோங்கும் செங்கை மலரழகும் – ஊனோங்கும்
223. ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்
காணவைத்த செங்கமலக் கையழகும் – நாணமுற்றே
224. ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்
வாங்கும் அபய மலரழகும் – தீங்கடையாச்
225. சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்
சார்வரத வொண்கைத் தலத்தழகும் – பேரரவப்
226. பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்
மாணிலங்க மேவுதிரு மார்பழகும் – சேணிலத்தர்
227. மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்
தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் – பாலடுத்த
228. கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்
கீழ்க்கோ வணத்தின் கிளரழகும் – கீட்கோலம்
229. ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்
கட்டிநின்ற வீரக் கழலழகும் – எட்டிரண்டும்
230. சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று
தித்திக்கும் சேவடியின் சீரழகும் – சத்தித்து
231. மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய
செல்வத் திருவடியின் சீரழகும் – சொல்வைத்த
232. செம்மை மணிமலையைச் சேர்ந்த – மரகதம்போல்
அம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் – அம்மமிகச்
233. சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்
பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் – தீர்த்தருளம்
234. கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்
கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் – தொண்டடைந்து
235. பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று
கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் – நீட்டாமல்
236. ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்
சொன்னா லுலகத் துயரறுங்காண் – எந்நாளும்
237. பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்
உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் – அன்னவன்றன்
238. ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்
நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் – ஊட்டுமவன்
239. மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்
பாற்கடலை யீந்தவருட் பான்மைதனை – நூற்கடலின்
240. மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ – முத்திநெறி
241. மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த
வாணாள்91 வழங்கியதோர் வண்மைதனை – நாணாளும்
242. நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்
புண்ணியருக் கீதொன்றும் போதாதோ – புண்ணியராம்
243. சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க
வந்திரப்புச் சோறளித்த வண்மைதனை – முந்தகத்தில்
244. பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்
போதமுளோர்க் கீதொன்றும் போதாதோ – போதவும்நெய்
245. அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்
செங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை – இங்கோதச்
246. சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்
புந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ – முந்தவரும்
247. நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற்
கற்றுணை92யோர் தெப்பமெனக் காட்டியதை – இற்றெனநீ
248. மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ – தாவுநுதல்
249. கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை
மண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் – பண்புடையோர்
250. மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ – நீணரகத்
251. தீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்
பாங்கடையச் செய்தஅருட் பண்பதனை – ஈங்குலகர்
252. துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு
பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ – தங்கியஇப்
253. பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு
ஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் – சீரறிவோர்
254. சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு
புல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ – நல்லதிருப்
255. பாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க்
கோதில்விற கேற்றுவிலை கூறியதை – நீதியுளோர்
256. சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்
போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ – போற்றுகின்ற
257. ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு
தேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் – நீடுகின்ற
258. பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
ஓம்புவதற் கியார்தா முவவாதார் – சோம்புறுநீ
259. வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்
அன்பென்பதி யாதோ அறியாயே – அன்புடனே
260. செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா
தஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் – வஞ்சமற
261. நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை
யாரையே நாடாதார் என்றுரைப்பேன் – ஈரமிலாய்
262. நீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை
யேயோநின் தன்மை இருந்தவிதம் – ஓயாத
263. அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்
நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் – உன்புடையோர்
264. அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்
தின்புடையா ரேனும் இணங்குவரே – அன்புடனே
265. தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் – நீவன்பால்
266. நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர்
என்றாலும் என்சொற் கிணங்குவரே – குன்றாது
267. பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்
அத்தோ93உனக்கீ தறைகின்றேன் – சற்றேனும்
268. கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்
வேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் – வேள்வியென்ற
269. வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்
கோலைவருங் காலிங் கொளிப்பாயே – மாலையுறும்
270. இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்
செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் – அப்பாழில்
271. செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்
சொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் – பொல்லாத
272. அஞ்ச94ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்
நஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் – வஞ்சகத்தில்
273. ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே
ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் – நீடுலகைச்
274. சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
வீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் – தாழ்வொன்றே
275. ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்
போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் – யோகின்றி
276. ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்
நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் – வென்றிபெறும்
277. சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்
மேவிப் பலவாய் விரிகின்றாய் – பாவித்துக்
278. குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்
ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் – நன்றுருகாக்
279. கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்
கல்லென்றால் என்சொல் கடவாதே – புல்லநினை
280. வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்
கொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே – அல்லலெலாம்
281. கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்
ஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே – நீட்டுலகர்
282. ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்
பேசுகின்றோர் தம்மைப் பிடியாதே – கூசுகிற்பக்
283. கண்டோரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது
கொண்டோரைக் கண்டால் குலையாதே – அண்டார்க்கும்
284. பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்
மேவில் வயப்பட்டால் எதிராதே – நோவியற்றி
285. வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
ஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே – சீறுகின்ற
286. வென்னடைசேர்96 மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்
மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே – நின்னையினி
287. என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த
பொன்னென்பேன் என்வழியில் போந்திலையே – கொன்னுறநீ
288. போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்
ஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் – தோம்விளைக்கும்
289. நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா
நின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் – என்னிலிவண்
290. ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்
வாதிலிழுத் தென்னை மயக்கினையே – தீதுறுநீ
291. வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்
றென்னே அறியாமல் இட்டழைத்தேன் – கொன்னேநீ
292. நோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை
ஆவ தறியா தழுந்தினையே – மேவுமதில்
293. உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்
நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப – விள்வதின்றி
294. வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்
தேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் – ஓடிஅங்கு
295. பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்
சேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் – சார்ந்தாங்கு
296. சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்
செந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் – வந்தீங்கு
297. மண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்
நண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் – எண்ணற்ற
298. போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய
பேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் – சோரறிவில்
299. கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்
முள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் – அள்ளலுற
300. ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்
பேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் – ஆதலினால்
301. வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்
தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே – இம்மாய
302. மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்
என்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே – தொன்றுலகில்
303. பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்
எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே – பெண்ணிங்கு
304. மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்
நாமார்த்தம் ஆசையென நாடிலையே – யாமார்த்தம்
305. மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்
தந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ – மந்திரத்தில்
306. பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்
நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே – ஆய்விலுன்றன்
307. ஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின்
தோழைமையென் றந்தோ துணிந்திலையே – ஊழமைந்த
308. காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்
பேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே – பாரிடையோர்
309. எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்
கண்வாள் அறுப்பக் கனிந்தனையே – மண்வாழும்
310. ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை
ஈரானை யைக்கண் டிசைந்தனையே – சீரான
311. வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
வெற்பென்றால் ஏற விரைந்தனையே – பொற்பொன்றும்
312. சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்
சிங்கமெனில் காணத் திரும்பினையே – இங்குசிறு
313. பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்
பாம்பென்றால் சற்றும் பயந்திலையே – ஆம்பண்டைக்
314. கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்
பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே – கீழ்க்கதுவும்
315. கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு
கல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே – அல்அளகம்
316. மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி
ஐயோ நரைப்ப தறிந்திலையோ – பொய்யோதி
317. ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்
வெண்பிறையன் றேயதனை விண்டிலையே – கண்புருவம்
318. வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
சொல்லென்றால் சொல்லத் துணியாயே – வல்லம்பில்
319. கட்கு வளைஎன்றாய்க் கண்ர் உலர்ந்துமிக
உட்குழியும் போதில் உரைப்பாயே – கட்குலவு
320. மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்
உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ – எய்த்தலிலா
321. வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ
டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ – வெள்ளைநகை
322. முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்
ஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ – நல்லதொரு
323. கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்
செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே – செவ்வியகண்
324. ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்
வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே – கூடியதோர்
325. அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்
எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே – நந்தெனவே
326. கண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல்
கொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ – விண்டவற்றைத்
327. தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு
மூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே – நாளொன்றும்
328. செங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப்
பொங்காப் பலவிரலின் பூட்டுண்டே – மங்காத
329. செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்
கெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே – செவ்வைபெறும்
330. செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி100யது
துப்பென் றவர்க்கியாது சொல்லுதியே – வப்பிறுகச்10
331. சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு
வீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே – தாழ்ந்தஅவை
332. மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்
புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே102 – திண்கட்டும்
333. அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்
செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே – அந்நீரார்
334. கண்ர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக
வெண்ர் வரல்கண்டும் வெட்கிலையே – தண்ர்மைச்
335. சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்
மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ – மேடதனை10
336. ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்
தோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே – நு‘லிடைதான்
337. உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்
கண்டோர்பூட்105 டுண்டென்பார் கண்டிலையே – விண்டோங்கும்
338. ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே – தாழ்ங்கொடிஞ்சித்
339. தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு
நீராழி யென்பவர்க்கென் நேருதியே106 – ஆராப்புன்
340. நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்
சோர்வழியை என்னென்று சொல்லுதியே – சார்முடைதான்
341. ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப்புண் என்று விடுத்திலையே – ஊறாக்கி
342. மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்
சீலையிடக் கண்டும் தெரிந்திலையே – மேலையுறு
343. மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்
கோநரகம் என்றால் குலைந்திலையே – ஊனமிதைக்
344. கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்
தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே – அண்டாது
345. போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே – மாதரவர்
346. தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி
வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே – நன்கிலவாய்
347. ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே
வாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே – சேந்தவடி
348. தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்
வெண்டா மரையென்று மேவுதியோ – வண்டாரா
349. மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்
தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ – வானாட்டும்
350. மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ
தொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்107 – ஒன்றாச்சொல்
351. வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ
தாள்வா கனமென்றால் ஆகாதோ – வேளானோன்
352. காகளமாய்108 இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்
காகளமென் பார்க்கென் கழறுதியே – நாகளவும்
353. சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம
சாயை109யஃ தென்பார்க்கென் சாற்றுதியே – சேயமலர்
354. அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற
அன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே – அன்னவரை
355. ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்
தீரா யிரநாடி யாண்டுடைத்தே – பாரார்ந்த
356. முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்
துன்னு முரோமத் துவாரமுண்டே – இன்னமுதால்
357. செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்
வைதிடினும் மற்றதனை வையாயே – பொய்தவிராய்
358. ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது
கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே – கொள்ளுமவர்
359. ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்
கேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ – நாடிலவர்
360. மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை
வல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் – வில்லியல்பூண்
361. வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்
பாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே – வேய்ந்தாங்கு
362. சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்
சென்றாலும் அங்கோர் திறனுண்டே – சென்றாங்கு
363. நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி
நின்றாலும் அங்கோர் நிலையுண்டே – ஒன்றாது
364. கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்110கல்லணைத்துக்
கொண்டாலும் அங்கோர் குணமுண்டே – பெண்டானார்
365. வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு
செய்தாலும் அங்கோர் சிறப்புளதே – கைதாவி
366. மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ
செத்தாலும் அங்கோர் சிறப்புளதே – வைத்தாடும்
367. மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து
துஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே – வஞ்சியரைப்
368. பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்
பார்த்தாலும் அங்கோர் பலனுண்டே – சேர்த்தார்கைத்
369. தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம்
தொட்டாலும் அங்கோர் துணையுண்டே – நட்டாலும்
370. தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை
வவ்வுகினும் அங்கோர் மதியுண்டே – செவ்விதழ்நீர்
371. உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்
உண்டாலும் அங்கோ ருரனுண்டே – கண்டாகக்
372. கவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக்
கவ்வுகினும் அங்கோர் கதியுண்டே – அவ்விளையர்
373. மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்
மென்றாலும் அங்கோர் விளைவுண்டே – முன்றானை
374. பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு
பட்டாலும் அங்கோர் பலனுண்டே – கிட்டாமெய்த்
375. தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்
தீண்டிடினும் அங்கோர் திறனுண்டே – வேண்டியவர்
376. வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்
நாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே – தாக்கவர்க்காய்த்
377. தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
போட்டாலும் அங்கோர் புகழுண்டே – வாட்டாரைக்
378. கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்
உண்டாலும் அங்கோர் உறவுண்டே – மிண்டாகும்
379. இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை
நுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே111 – மங்கையர்தம்
380. ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது
காத்தாலும் அங்கோர் கனமுண்டே – பூத்தாழ்வோர்
381. காட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
கேட்டாலும் அங்கோர் கிளருண்டே – கோட்டாவி
382. ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்
வீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே – வீழ்ந்தாருள்
383. வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்
காட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே – கூட்டாட்குச்
384. செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்
பைகையிடல் கண்டும் பயந்திலையே – சைகையது
385. கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே – எய்யாமல்
386. ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்
கூறுவனேல் அம்ம குடர்குழம்பும் – கூறுமிவர்
387. வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்
ஆயொருபால் செய்ய அழிவார்காண் – ஆயஇவர்
388. நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்
சென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் – இன்றிவரை
389. வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்
புஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ – அஞ்சுறுமீர்
390. வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு
நாளென்கோ வெய்ய நமனென்கோ – கோளென்கோ
391. சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால
காலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ – ஞாலமதில்
392. பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் – பெண்என்றால்
393. பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த
சேயும் இரங்குமவர் தீமைக்கே – ஆயுஞ்செம்
394. பொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய்
என்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே – இன்னாமைக்
395. கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்
வித்தென் றறிந்துமதை விட்டிலையே – தொத்தென்று
396. பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்
ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே – நேசமிலாய்
397. நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே
பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே – பொன்னாசை
398. வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில்
எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் – தத்துகின்ற
399. பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற்
றென்னுடையார் கண்டிங் கிருந்தனையே – பொன்னிருந்தால்
400. ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்
ஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் – ஏற்றவிடம்
401. வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்
ஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் – ஏய்க்காது
402. நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான
தென்றால் அரகரமற் றென்செய்வாய் – நன்றாக
403. ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை
என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் – வென்றியொடு
404. பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் – பேர்த்தெடுக்கக்
405. கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி
எய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் – பொய்புகுத்தும்
406. பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்
தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் – பொன்காவல்
407. வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் – மாறும்சீர்
408. உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்
இன்னே வருவனதற் கென்செய்வாய் – முன்னேதும்
409. இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்
எல்லாம் அழியுமதற் கென்செய்வாய் – நில்லாமல்
410. ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது
பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே – ஆய்ந்தோர்சொல்
411. கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற
சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே112- பேர்த்தோடும்
412. நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா
ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே – கீழ்க்கொல்லைப்
413. பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்
இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே – இச்சையிலார்
414. இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்
இட்டமதை விட்டற்113 கிசைந்திலையே – முட்டகற்றப்
415. பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்
என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே – இந்நிலத்தில்
416. நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்
வீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத்
417. திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
எச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே – வெச்சென்ற
418. மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம்
மண்ணால் அழிதல் மதித்திலையே – எண்ணாது
419. மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்
மண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே – திண்கொண்ட
420. விண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி
மண்ணேனுங் கொண்டேக வல்லாரோ – மண்நேயம்
421. என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்
இன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ – மன்னுலகில்
422. கண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த
மண்காணி என்று மதித்தனையே – கண்காண
423. மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை
விண்காணி வேண்டல் வியப்பன்றே – எண்காண
424. அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்
அந்தரத்தில் நின்ற தறிந்திலையே – தந்திரத்தில்
425. மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்
மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே – வண்கொடுக்கும்
426. வீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய்
வீடென்ற சொற்பொருளை விண்டிலையே – நாடொன்றும்
427. மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும்
கண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ – மண்ணான
428. மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்
பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ – மேல்வீட்டில்
429. ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்
தேறுவனேல் உன்னாசை என்னாமோ – கூறிடும்இம்
430. மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்
எண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே – மண்ணிடத்தில்
431. ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் – என்னிலுன்றன்
ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் – போகாத
432. பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்
கோபக் கடலில் குளித்தனையே – தாபமுறச்
433. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே114 – மல்லல்பெறத்
434. தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே115 – துன்னி
435. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்
திகழ்வாய் மையும்நீ தெளியாய்116 – இகழ்வாரை
436. எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்
றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே – தெவ்வென்ன
437. ஓரா வெகுளி யுடையான் தவமடையான்
தீராயென் பாரதுவும் தேர்ந்திலையே – பேராநின்
438. வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே – செவ்வையிலாய்
439. ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்
காய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே – வாய்ந்தறிவோர்
440. எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற
கொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே – பொல்லாத
441. வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்
அன்போ டிரக்கம் அடைந்திலையே – இன்போங்கு
442. தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்
வாய்மையென்ப தொன்றே மதித்திலையே – தூய்மையிலாய்
443. மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே
நானொருவன் என்று நடித்தனையே – ஆனமற்றைப்
444. பாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில்
சாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் – பாதகத்தில்
445. ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக
மாயா விகாரம் மகிழ்ந்தனையே – சாயாது
446. நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற
தாயிளமை எத்தனைநாள் தங்கியதே – ஆயிளமை
447. மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்
கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ – மெய்கொடுத்த
448. கூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து
கானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ – ஊனொடுங்க
449. ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்
பைய நடப்பவரைப் பார்த்திலையோ – வெய்யநமன்
450. நாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு
காடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ – பீடடைந்த
451. மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து
கையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ – மெய்யுலர்ந்தும்
452. சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ
ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ – ஆகாத
453. கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர
கண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ – கொண்டவுடல்
454. குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத
குட்டமென நோவார் குறித்திலையோ – துட்டவினை
455. மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது
சூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ – சாலவுமித்
456. தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
மேகமிஃ தென்பாரை மேவிலையோ – தாகமுறச்
457. சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு
பித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ – மெத்தரிய
458. கைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய
மெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ – எய்ப்புடைய
459. முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய
எட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ – தட்டூறிங்
460. கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்
எண்ணப் படுமோவென் றெண்ணிலையோ – எண்ணத்தில்
461. பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை
மெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே – கைநின்று
462. கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்
நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே – மாகாதல்
463. பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே – பண்டிருந்த
464. ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு
நீராடல் சற்றும் நினைந்திலையே – சீராக
465. இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்
நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே – ஒன்றி
466. உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை
மறங்கருதி அந்தோ மறந்தாய்117 – கறங்கின்
467. நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்
மருவும் குறட்பா மறந்தாய்118 – தெருவில்
468. இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் – இறந்தார்
469. பறையோசை அண்டம் படீரென் றொலிக்க
மறையோசை யன்றே மறந்தாய் – இறையோன்
470. புலனைந்தும்என்றருளும் பொன்மொழியை மாயா
மலமொன்றி அந்தோ மறந்தாய்119 – நிலனொன்றி
471. விக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர்
நெக்குருகல் அந்தோ நினைந்திலையே – மிக்கனலில்
472. நெய்விடல்போல் உற்றவர்கண்ணீர்விட் டழவுயிர்பல்
மெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே – செய்வினையின்
473. வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய
நாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே – கோள்கழியும்
474. நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு
நாழிகையாய் எண்ணி நலிந்திலையே – நாழிகைமுன்
475. நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்
சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே – பின்றாது
476. தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்
விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே – தட்டாமல்
477. உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்
கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே – வண்தாரார்
478. நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று
சாற்றுவது கேட்டும் தணந்திலையே – வீற்றுறுதேர்
479. ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே – சேர்ந்தாங்கு
480. என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்
அன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே – கொன்னே
481. மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் – கருவொன்
482. றொடுதிங்கள் ஐயைந்தில்120 ஒவ்வொன்றில் அந்தோ
கெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் – படுமிந்
483. நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் – பலனுற்றே
484. காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்
கோவென் றழுவார் குறித்திலையோ – நோவின்றிப்
485. பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே
காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ – மேலுவந்து
486. பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்
அற்றாவி போவ தறிந்திலையோ – கற்றாயப்
487. பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்
அள்ளியிடுந் தீமை அறிந்திலையோ – பள்ளிவிடும்
488. காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்
ஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ – வேளைமண
489. மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே
சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே – மேற்பிள்ளை
490. மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்
பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ – வீடலிஃ
491. திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை
எக்கணமோ என்றார்நீ எண்ணிலையே – தொக்குறுதோல்
492. கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட
ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ – காடென்கோ
493. பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி
ஏழென்கோ கன்மமதற் கீடென்கோ – தாழ்மண்ணின்
494. பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும
காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ – கோண்தகையார்
495. மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ
பொய்யென்கோ மாயப் பொடியென்கோ – மெய்யென்ற
496. மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்
அங்கவற்றை எண்ணா தலைந்தனையே – தங்குலகில்
497. மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே – அற்றவரை
498. இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்
முக்கட்டும் தேட முயன்றனையே – இக்கட்டு
499. மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்
வெண்பட் டுடுக்க விரைந்தனையே – பண்ப ட்ட
500. ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்
மெய்யா பரணத்தின் மேவினையே – எய்யாமல்
501. காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்
ஏதிற் பணியினிடத் தெய்தினையே – தாதிற்குத்
502. துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்
நற்கந்தத் தின்பால் நடந்தனையே – புற்கென்ற
503. வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்
இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே – முன்சுவைத்துப்
504. பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்
சோறுண் டிருக்கத் துணிந்தனையே – மாறுண்டு
505. கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு
சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே – ஆம்பலனோர்
506. நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
இல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே – சொல்லாவி
507. ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை
ஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே – ஈன்றோர்கள்
508. நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்
வந்தால் அதுநீக்க வல்லாரோ – வந்தாடல்
509. உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்
மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ – சிற்றுணவை
510. ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்
வாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ – தீங்ககற்றத்
511. தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட
நீண்டாய் அவர்நன் னெறித்துணையோ – மாண்டார்பின்
512. கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்
வாடியழும் போது வருவாரோ – நீடியநீ
513. இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ
சீச்சீ இதென்ன திறங்கண்டாய் – இச்சீவர்
514. நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்
இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் – நின்னியல்பின்
515. எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்
வெத்தனையோ தேகம் எடுத்தனையே – அத்தனைக்கும்
516. அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்
கெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ – அவ்விதத்தில்
517. ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை
இன்றே துறத்தற் கிசையாயோ – நின்றோரில்
518. தாயார் மனையார் தனயரார் தம்மவரார்
நீயார் இதனை நினைந்திலையே – சேயேகில்
519. ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை
வாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ – நீங்கியிவண்
520. உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ
என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே – சென்றுபின்னின்
521. தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்
என்மனையாள் என்பதுநீ எவ்வணமே – நன்மைபெறும்
522. நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்
உட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே – நட்புடையாய்
523. எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்
இம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ – வம்மாறில்
524. எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்
தம்பந்தம் எவ்வாறு தங்கியதே – சம்பந்தர்
525. அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை
மற்றைமொழி போன்று மறந்தனையே – சிற்றுயிர்க்குக்
526. கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்
கற்பனையை மெய்யென்று கண்டனையே – பற்பலவாம்
527. தூரியத்தில்122 தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா
காரியத்தை மெய்யெனநீ கண்டனையே – சீரியற்றும்
528. ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட
நாடகத்தை மெய்யென்று நம்பினையே – நீடகத்தில்
529. காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த
மாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே – வாயவித்தை
530. இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு
முப்படகத் துள்ளே முயங்கினையே – ஒப்பிறைவன்
531. ஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும்
கானலினை நீராய்க் களித்தனையே – ஆனகிரி
532. யாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப்
பாசத்தி னுள்ளே படர்ந்தனையே – நேசத்தின்
533. பொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால லீலைதனை
மெய்யென்று வீணில் விரிந்தனையே – பொய்யென்று
534. மீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக்
கேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே – ஈட்டிநின்ற
535. காலத்தை வீணில் கழிக்கும் படிமேக
சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே – சாலத்தில்
536. கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்
றுண்மையொன்றுங் காணா துழன்றனையே – வண்மையிலாய்
537. இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்
கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே – தங்குறுமித்
538. தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ
மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் – ஓகோநும்
539. கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே – மாமுடிக்கும்
540. வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்
வீழ்வுகொடு123 வாளா விழுகின்றாய் – தாழ்வுறநும்
541. விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்
உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே – தொண்டுலகங்
542. கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்
நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் – ஆனநும்மூர்
543. வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
கொள்ளத் திரிபவர்போல் கூடினையே – கொள்ளவிங்கு
544. கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ
கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் – உண்டழிக்க
545. ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
ஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே – ஏழியற்றும்
546. தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற
சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே – பற்பகலும்
547. உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்
கண்டனவே கண்டு களிக்கின்றாய் – கொண்டனவே
548. கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்
பண்டறியார் போலப் படர்கின்றாய் – பண்டறிந்து
549. சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை
நல்லோர்கள் கண்டால் நகையாரோ – செல்லான
550. காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்
காலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் – சாலவுமுன்
551. போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்
யாதுபயன் எண்ணி இனைகின்றாய் – தீதுசெயும்
552. வீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல
ஆணவத்தி னாலே அழிந்தனையே – ஆணவத்தில்
553. நீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை
நீயார் எனவினவி நீண்டனையே – ஓயாமல்
554. ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ
நானென்று சொல்லி நலிந்தனையே – நானென்று
555. சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ
அல்லலுறுங் காலத் தறைகண்டாய் – அல்லவெலாம்
556. நீஇங்கே நான்அங்கே நிற்கநடு வேகுதித்தால்
நீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் – நீஇங்கு
557. ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்
இன்றடுத்த நீஎங் கிருந்தனையே – மன்றடுத்த
558. தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது
வாளா மதத்தின் மலிகின்றாய் – கேளாயிச்
559. சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்
சோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் – சார்புபெருந்
560. தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்
வாவென் றெனையும் வலிக்கின்றாய் – ஓவுன்றன்
561. சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்
சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் – நீட்சியில்நீ
562. காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்
மாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ – வாலுமண்டக்
563. கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்
ஏவல்கொ ளுமேழை என்கேனோ – பாவத்தில்
564. சுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில்
எற்றுண்ட நான்திரணம் என்கேனோ – பற்றிடுநீ
565. சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்
அங்கட் சருகென் றறைகேனோ – பொங்குற்ற
566. சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்
நூலிழைநான் என்று நுவல்கேனோ – மாலிடுநீ
567. துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்
உள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ – எள்ளுறுநீ
568. பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்
நீழலைநான் என்று நினைகேனோ – நீழலுறா
569. நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்
என்வசம்நீ என்ப திலைகண்டாய் – என்வசம்நீ
570. ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ
வானாடர் வந்து வணங்காரோ – ஆனாமல்12
571. எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்
கண்ணுதலும் அங்கைக் கனியன்றோ – எண்ணுமிடத்
572. தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்
கொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் – வன்செய்யும்
573. சிந்தோடும்126 ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்
அந்தோ உனையார் அடக்குவரே – வந்தோடும்
574. கச்சோதம்127 என்னக் கதிரோன் தனையெடுப்பர்
அச்சோ உனையார் அடக்குவரே – வைச்சோங்கு
575. மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்
ஆவுனையும் இங்கார் அடக்குவரே – மேவுபல
576. தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்
வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் – மாசுடைய
577. போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா
யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் – மேகமென்றும்
578. வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
ஊனென்றும் மற்றை உறவென்றும் – மேல்நின்ற
579. சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக
நீதியென்றும் கன்ம நெறியென்றும் – ஓதரிய
580. அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்
பண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் – கொண்டிருந்த
581. உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப
எந்நினைவு கொண்டோமற் றிவ்வுலகர் – எந்நவையும்
582. தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்
அந்தோநின் செய்கை அறியாரே – அந்தோநான்
583. ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்
ஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் – நாம்அன்பாய்
584. என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்
நன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் – தொன்றெனவே12
585. செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம்
நல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை – சொல்கிற்பில்
586. ஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான்
நோவதுவும் கண்டயலில் நோக்கினையே – தாவுமெனக்
587. காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்
ஊணவலம் உற்றாரோ டூரவலம் – பூணவலம்
588. ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்
தான்அவலம் என்றாலென் சாற்றுவதே – நான்இவணம்
589. இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்
துன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் – வன்புடைய
590. இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது
செப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் – செப்பிறப்பின்
591. ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
வாயாகி னும்போத மாட்டாதேல் – ஏஏநாம்
592. செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்
நைவதெல்லாம் கண்டு நடந்தனையே – கைவருமிவ்
593. இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்
சொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே – வல்இயமன்
594. நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ்
வேளையோ தூது விடில்அவர்கள் – கேளையோ
595. நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்
செல்லோம் எனினுமது செல்லாதே – வல்லீர்யாம்
596. இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்
என்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே – மன்சொலுடைத்
597. தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
நாமறைவோம் என்றல் நடவாதே – நாமிவணம்
598. அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்
நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் – என்னாநின்
599. றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் – தீதுநன்றோ
600. டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா
நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே – சாற்றுமந்த
601. தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்
தாமதமே மோக சமுத்திரம்காண் – தாமதமென்
602. றையோ ஒருநீ அதனோடு கூடினையால்
பொய்யோநாம் என்று புகன்றதுவே – கையாமல்
603. ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்
என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ – பன்னுறுநின்
604. தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்
போதெல்லாம் சொல்லிடினும் போதாதே – ஆதலினால்
605. வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்
செய்கின்றாய் ஈதோர் திறமன்றே – உய்கிற்பான்
606. வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை
நாடுகின்றாய் ஈதோர் நலமன்றே – கூடுகின்ற
607. ஈண்டோர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்
நீண்டாய் இஃதோர் நெறியன்றே – வேண்டாநீ
608. மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை
முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே – சுற்றிமனம்
609. தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் – வானடங்க
610. எல்லா நலமும் இதனால் எனமறைகள்
எல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் – எல்லார்க்கும்
611. மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்
றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் – ஆகுமிந்த
612. நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய
தன்மைவிடல் அந்தோ சதுரலஇப் – புன்மையெலாம்
613. விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ
இட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் – கட்டழித்த
614. வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற
மூடம் சுகமென்றும் முன்பலவாம் – தோடம்செய்
615. போகம் சுகமென்றும் போகம் தரும்கரும
யோகம் சுகமென்றும் உண்டிலையென் – றாகஞ்செய்
616. போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து
நாதம் சுகமென்றும் நாம்பொருளென் – றோதலஃ
617. தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த
நன்றே சுகமென்றும் நாம்புறத்தில் – சென்றேகண்
618. டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே
ஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் – ஏற்றபடி
619. வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே
சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று – சொல்லுகின்ற
620. வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற
நானாதி மூன்றிலொன்று நாடாமல் – ஆனாமை
621. எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் – வள்ளலென
622. வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
சூழும் சுகமே சுகம்கண்டாய் – சூழ்வதனுக்
623. கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம
இவ்வா றிருந்தால் இயலாதால் – செவ்வாற்றில்
624. பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது
பற்றற்றால் அன்றிப் பலியாதால் – பற்றற்றல்
625. வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க
வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் – வாதனையும்
626. ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற
ஞானம்வந்தால் அன்றி நலியாதால் – ஞானமது
627. போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி
வேகமுற்றால் அன்றி விளங்காதால் – ஆகவஃ
628. துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்
எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் – எண்ணமது
629. பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்
சங்கமடைந் தாலன்றிச் சாராதால் – இங்கதனால்
630. வீழ்முகத்த ராகிநிதம் வெண் றணிந்தறியாப்
பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் – பாழ்முகத்தில்
631. பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே
வாயாடு வோர்பால் மருவிநில்லேல் – நீயாடிப்
632. பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே
வாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் – சாதித்துச்
633. சைவமெங்கே வெண்ற்றின் சார்பெங்கே மெய்யான
தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் – உய்வதெங்கே
634. தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை
நேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் – ஓராமல்
635. எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து
கொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் – நள்ளொன்று
636. நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை
ஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் – தாமொன்ற
637. எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்
பொல்லா வலக்காரர் பொய்உகவேல் – புல்லாக
638. அற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய
கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் – சிற்சிலவாம்
639. சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா
சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் – பொத்தியஇச்
640. சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த
கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் – கன்மமிகு
641. மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக
யோகம் பொருளென்பா ரூடுறையேல் – ஏகம்கொள்
642. மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்
பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் – மண்ணின்பால்
643. மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்
றென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் – மன்நலங்கள்
644. பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்
தேற்றார் சிவபூசை செய்யாராய்ப் – பூத்தாவி
645. வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்
கூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் – மாறுகின்ற
646. நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்
தாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் – நீட்கோல
647. மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்
பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் – பொய்யொழுக்கில்
648. பொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால்
அந்நூல் விரும்பி அடைந்தலையேல் – கைந்நேர்ந்து
649. கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி
நாடா தவரவையை நண்ணியிடேல் – கோடாது
650. கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு
புல்லாக எண்ணிப் புறம்பொழிக – எல்லாமும்
651. ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை
நீகனவி லேனும் நினையற்க – ஏகனடிக்
652. கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே
ரின்பே உணர்வாய் இசைந்தாரும் – அன்பாகிக்
653. கண்டிகையே பூணிற் கலவையே வெண்றாய்க்
கொண்டிகவாச் சார்பு குறித்தாரும் – தொண்டுடனே
654. வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்
தூய்மலரால் மாலை தொடுப்பாரும் – சார்மலரோன்
655. ஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச்
சீர்நந்த னப்பணிகள் செய்வோரும் – நார்நந்தாத்
656. தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்
கோயில்மெழு காநின்ற கொள்கையரும் – மேயினரைத்
657. தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்
கோயில் விளக்கும் குணத்தோரும் – தூயஅருள்
658. இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்
அன்புடனே செய்தங் கமர்வாரும் – அன்புடனே
659. அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ
புண்ணியமே நாளும் புரிவோரும் – புண்ணியமாம்
660. தேனே அமுதே சிவமே சிவமேஎம்
மானேஎன் றேத்தி மகிழ்வாரும் – வானான
661. மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்
அன்னேஎன் றுன்னி அமர்வோரும் – நன்னேயப்
662. பண்ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்
கண்ர்கொண் டுள்ளம் களிப்போரும் – உண்ரில்
663. பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி
கண்டுகண்டு நாளும் களிப்போரும் – தொண்டடையும்
664. பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்
சொற்பதிகம் கொண்டு துதிப்போரும் – சொற்பனத்தும்
665. மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு
வாசகத்தை வாயால் மலர்வோரும் – வாசகத்தின்
666. மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு
இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் – மன்னிசைப்பின்
667. நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்
சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் – சொல்வாய்ந்த
668. தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்
வேதாக மங்கள் விரிப்போரும் – வேதாந்தம்
669. சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று
தேர்ந்தே சிவபூசை செய்வோரும் – ஆர்ந்தேத்தி
670. நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து
மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் – முன்அயன்றன்
671. அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்
அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் – அஞ்செனவே
672. விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்
செஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் – வஞ்சம்செய்
673. பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை
நைவே தனமாக்கும் நல்லோரும் – செய்வேலை
674. நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் – வாடலறத்
675. தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் – மாயமுறு
676. மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்
தானதுவாய் நிற்கும் தகையோரும் – வானமதில்
677. வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்
தானங்கண் டாடும் தவத்தோரும் – மோனமொடு
678. தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்
வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் – ஆழ்நிலைய
679. வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத
காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து – ஊர்இயங்கத்
680. தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்
ஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் – அஞ்செனுமோர்
681. வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்
ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் – நீக்கிஅப்பால்
682. மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்
தாவி வயங்குசுத்த தத்துவத்தில் – மேவிஅகன்
683. றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்
டப்பால் பரவெளிகண் டப்பாலுக் – கப்பாலும்
684. தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்
பாரா இருந்த படியிருந்து – பேராது
685. கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து
கொண்டசிவ யோகியராம் கொற்றவரும் – அண்டரிய
686. சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர
தத்துவத்தின் நிற்கும் தகவோரும் – அத்துவத்தில்
687. தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த
யாதும் சமமா இருப்போரும் – கோதுபடக்
688. கூறும் குறியும் குணமும் குலமுமடி
ஈறும் கடையும் இகந்தோரும் – வீறுகின்ற
689. சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த
சாந்தி யுடனே சரிப்போரும் – சாந்திபெறத்
690. தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்
செம்மையுடன் வாழும் திறலோரும் – எம்மையினும்
691. ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்
நீராக நீந்தி நிலைத்தோரும் – சேராது
692. தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்
செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் – மண்பொருள்போய்த்
693. தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்
பேயரென நண்ணும் பெரியோரு – மீயதனின்
694. எய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க
மெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் – மெய்ப்படவே
695. யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்
சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் – ஓவலின்றி
696. வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்
செய்திடினும் தன்மை திறம்பாரும் – மெய்வகையில்
697. தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்
ஏறா திழியா திருப்போரும் – மாறாது
698. மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர
மானந்தா தீதத் தமர்ந்தோரும் – தாம்நந்தாச்
699. சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்
சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் – நீதுக்கம்
700. நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்
ஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி – ஓங்குசிவ
701. பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக
எஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் – செஞ்சோதித்
702. தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை
யாதொன்றும் நோக்கா தமைந்திடுக – தீதென்ற
703. பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்
வாழ்வாய்என் னோடும் மகிழ்ந்து.
காப்பு
குறள்வெண்பா
திருச்சிற்றம்பலம்
1. சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றைச் சேர்ந்திடில் ஆம்
பேர் சான்ற இன்பம் பெரிது
2. ஆறுமுகத்தான் அருள் அடையின் ஆம் எல்லாப்
பேறும் மிகத் தான் பெரிது
கலிவெண்பா
1. பொன் ஆர் மலை போல் பொலிவுற்று அசையாமல்
எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன
2. இப் பிறப்பினோடு இங்கு எழு பிறப்பும் அன்றி எனை
எப் பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன்
3. செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற
இ ஒரு சொல் கேட்டிடுக என் நெஞ்சே எவ்வெவ்
4. உலகும் பரவும் ஒரு முதலாய் எங்கும்
இலகும் சிவமாய் இறையாய் விலகும்
5. உருவாய் உருவில் உருவாய் உருவுள்
அருவாய் அருவில் அருவாய் உருஅருவாய்
6. நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் முத்தி அருள்
7. ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
நன்றாய் நவமாய் நடு நிலையாய் நின்று ஓங்கும்
8. வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பர
நாதமாய் நாதாந்த நாயகமாய் ஓதும்
9. செறிவாய்த் திரமாய்ச் சிதாகாசமாய்ச் சொல்
அறிவாய் அறிவுள்_அறிவாய் நெறி மேவு
10. காலமாய்க் காலம் கடந்த கருத்தாய் நல்
சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் ஞாலம்
11. பொருந்தா பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்
பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய்த் திருந்தாத
12. போக்கும்_வரத்தும் இலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா
13. ஆதியாய் ஆதி நடு அந்தமாய் ஆங்கு அகன்ற
சோதியாய்ச் சோதியாச் சொல் பயனாய் நீதியாய்
14. ஆங்கார நீக்கும் அகார உகாரம்-அதாய்
ஓங்காரமாய் அவற்றின் உட்பொருளாய்ப் பாங்கான
15. சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் வித்தமாய்
16. அண்டமாய் அண்டத்து அணுவாய் அருள் அகண்டா
கண்டமாய் ஆனந்தாகாரம்-அதாய் அண்டத்தின்
17. அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மை-அதாய்
எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் செப்பாலும்
18. நெஞ்சாலும் காய நிலையாலும் அ நிலைக்குள்
அஞ்சாலுங் காண்டற்கு அரும் பதமாய் எஞ்சாப்
19. பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்
தரமாய்ப் பரப்பிரமம்-தானாய் வரமாய
20. ஒன்பான் வடிவாய் ஒளி எண்_குண_கடலாய்
அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் இன்பாய்
21. அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
சகமாய்ச் சகமாயை_தானாய் சகமாயை_
22. இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்
கொல்லாதார்க்கு இன்பம் கொடுப்பதாய் எல்லார்க்கும்
23. நண்ணுவதாய் நண்ணாதாய் நல்_வினையாய் அல்_வினையாய்
எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் எண்ணுகின்ற
24. வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_
தானாய் வழிபடும் நான்-தான்_தானாய் வான் ஆதி
25. ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
மன்றிடத்தில் என்றும் வதிவதாய் ஒன்றியதோர்
26. ஐந்நிறமாய் அ நிறத்தின் ஆம் ஒளியாய் அ ஒளிக்குள்
எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில்
27. பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் பூப்பது இன்றி
28. வாளாது இருப்பதுவாய் வாதனாதீதமாய்
நீளாது நீண்ட நிலையினதாய் மீளாப்
29. பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
அரிதாய் அரிதில்_அரிதாய்த் துரிய
30. வெளியாய்ப் பர_வெளியாய் மேவு பர விந்தின்
ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் தெளி ஆதி
31. கற்பகமாய்க் காணும் சங்கற்ப விகற்பமாய்
நிற்பதாகார நிருவிகற்பாய்ப் பொற்பு உடைய
32. முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய்ப் பின்_ஒளியாய்
எச்சுடரும் போதா இயல் சுடராய் அச்சில்
33. நிறைவாய்க் குறைவாய் நிறைகுறைவு_இல்லாதாய்
மறைவாய் வெளியாய் மனுவாய் மறையாத
34. சச்சிதானந்தம்-அதாய்த் தன்னிகர் ஒன்று இல்லாதாய்
விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் மெச்சுகின்ற
35. யோகமாய் யோகியா யோகத்து எழுந்த சிவ
போகமாய்ப் போகியாய்ப் போகம் அருள் ஏகமாய்க்
36. கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச் சகல
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் மா வலத்தில்
37. காட்சியாய்க் காண்பானாய்க் காணப்படு_பொருளாய்ச்
சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெறச்
38. செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்
உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் மொய்கொள்
39. அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
கதுவாது நின்ற கணிப்பாய்க் கதுவாமல்
40. ஐயம் திரிபோடு அறியாமை விட்டு அகற்றிப்
பொய் என்பது ஒன்றும் பொருந்தாராய்ச் செய் என்ற
41. ஓர் வினையில் இன்பமும் மற்று ஓர் வினையில் துன்பமும் ஆம்
சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய்ப் பார் வினையில்
42. ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும்
சார்பால் மயங்காத் தகையினராய்ச் சார்பாய
43. ஓர் இடத்தில் தண்மையும் மற்று ஓர் இடத்தில் வெம் சினமும்
பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் நீரிடத்தில்
44. தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த
ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் வெண்மை இலா
45. ஒன்றும் அறிவின் உதயாதி ஈறு அளவும்
என்றும் இரண்டு என்பது இல்லவராய் மன்ற ஒளிர்
46. அ மூன்றின் உள்ளே அடுக்கி வரும் ஒன்று அகன்ற
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் தம் ஊன்றி
47. வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை
நாடாது நான்கும் நசித்தவராய் ஊடாக
48. எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்
அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் எஞ்சாமல்
49. ஈண்டு ஆண்டு அருளும் இறையோர்-தமை ஆறில்
ஆண்டாண்டு கண்டு ஆறு அகன்றவராய் ஈண்டாது
50. வாழியுற்ற வானோரும் வந்து தமக்கு இரண்டோடு
ஏழ் இயற்ற ஏழும் இகந்தவராய் ஊழ் இயற்றக்
51. கட்டி நின்று உள் சோதி ஒன்று காணத் தொடங்குகின்றோர்
எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய்க் கட்டுகின்ற
52. தேன் தோய் கருணைச் சிவம் கலந்து தேக்குகின்ற
சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மலத்
53. தாக்கு ஒழிந்து தத்துவத்தின் சார்பாம் தனு ஒழிந்து
வாக்கு ஒழிந்து மாணா மனம் ஒழிந்து ஏக்கம் உற
54. வாய்க்கும் சுகம் ஒழிந்து மண் ஒழிந்து விண் ஒழிந்து
சாய்க்கும் இரா_பகலும்-தான் ஒழிந்து நீக்கு ஒழிந்து
55. நானும் ஒழியாது ஒழிந்து ஞானம் ஒழியாது ஒழிந்து
தானும் ஒழியாமல் தான் ஒழிந்து மோன நிலை
56. நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய்
நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய்
57. நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து
சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை
58. இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும்
வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில்
59. சுட்டு அகன்ற ஞான சுகாதீதம் காட்டி முற்றும்
விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற
60. அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்து அருளித்
திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு
61. வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டம் எலாம்
தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும்
62. வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமைத்
தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது
63. பற்றுருவாய்ப் பற்றாப் பர அணுவின் உள் விளங்கும்
சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின்
64. வையாது வைத்து உலகை மா இந்திரசாலம்
செய்யாது செய்விக்கும் சித்தன் எவன் நையாமல்
65. அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும்
செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே
66. நில்லாத காற்றை நிலையாக் கடத்து அடைத்துச்
செல்லாது வைக்கின்ற சித்தன் எவன் பொல்லாத
67. வெம் பாம்பை மேல் அணிந்து ஓர் வெம் புற்றின் உள் இருந்தே
செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர்
68. ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ்த்
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடைத்
69. தான் அசைந்தால் மற்றைச் சகம் அசையும் என்று மறை
தேன் அசையச் சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றிப்
70. பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய்ச்
சேர்த்து வருவிக்கும் சித்தன் எவன் போர்த்து மிக
71. அல் விரவுங் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர்
சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய்க்
72. கை கலந்த வண்மைக் கருப்பாசயப் பையுள்
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை
73. மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும்
செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும்
74. வித்து ஒன்றும் இன்றி விளைவித்து அருள் அளிக்கும்
சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் சத்துடனே
75. உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய்ப் பாவைகள் செய்
சிற்பத் தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம்
76. கார் ஆழிகளைக் கரை இன்றி எல்லை இலாச்
சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத
77. நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும்
சீர் மேவுறச் செய்யும் சித்தன் எவன் பார் ஆதி
78. ஐந்திலைந்து நான்கு ஒரு மூன்று ஆம் இரண்டு ஒன்றாய் முறையே
சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற
79. ஆண்பெண்ணாய்ப் பெண்ஆணாய் அண்மை-தனை வானின்
சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணாப்
80. பேடு ஆணாய்ப் பெண்ணாய்ப் பெண் ஆண் பெரும் பேடாய்ச்
சேடாகச் செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய
81. வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய்த்
திண்மை பெறச் செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா
82. ஓட்டினைச் செம்பொன்னாய் உயர் செம்பொன் ஓடாகச்
சேட்டை அறச் செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு
83. காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்
தேம் சிவணச் செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற
84. நாரணன்_சேய் நான்முகனாய் நான்முகன்_சேய் நாரணனாய்ச்
சீர் அணவச் செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவக்
85. கொம்மை பெறும் கோடாகோடி அண்டம் எல்லாம் ஓர்
செம் மயிர்க்காலுள் புகுத்தும் சித்தன் எவன் செம்மை இலா
86. வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அப் பசுவைச்
செம் புலியாச் செய்ய வல்ல சித்தன் எவன் அம்புலியை
87. அம் கதிர் ஒண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற
செங்கதிரைச் செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா
88. ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர்
சீர் அணுவாய்ச் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன்
89. முன் நகையா நின்றதொரு முப்புரத்தை அன்று ஒரு கால்
சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால்
90. மற்று இருந்த வானவரும் வாய்ந்து அசைக்கா வண்ணம் ஒரு
சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல்
91. அல்லா அயனும் அரியும் உருத்திரனும்
செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத
92. கல்லில் சுவையாய்க் கனியில் சுவை_இலதாய்ச்
செல்லப் பணிக்க வல்ல சித்தன் எவன் அல்லல் அறப்
93. பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனாதீதன் எனச்
சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தன் எவன் மார்க்கங்கள்
94. ஒன்று என்ற மேலவரை ஒன்று என்று உரைத்தவர்-பால்
சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள்
95. கல்_ஆனை தின்னக் கரும்பு அளித்துப் பாண்டியன் வீண்
செல்லாது அளித்த மகா சித்தன் எவன் சொல்லாத
96. ஒன்றே இரண்டே மேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும்
97. அத்திரத்தை மென் மலராய் அ மலரை அத்திரமாய்ச்
சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தன் எவன் எத் தலத்தும்
98. சங்கம்-அதே தாபரமாய்த் தாபரமே சங்கம்-அதாய்ச்
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற
99. சத்து எல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம்
100. நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை
காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு
101. வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள்
கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக
102. அள்ளு அஞ்சு எறியார்க்கே அன்றி அறிவார்க்குக்
கள்ளம் செறியாத கள்வன் எவன் எள்ளல் அறக்
103. கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில்
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில்
104. தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம்
கன்னமிடக் கைவந்த கள்வன் எவன் மன் உலகைச்
105. சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால்
கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இத்
106. தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம்
கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா
107. மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும்
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும்
108. மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய
காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற
109. பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றை நுதல்
கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவன் எண்ணாது
110. நான் என்று நிற்கில் நடுவே அ நான் நாணத்
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற
111. மாயை-தனைக் காட்டி மறைப்பித்து அ மாயையில் தன்
சாயை-தனைக் காட்டும் சதுரன் எவன் நேயமுடன்
112. நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடு-தொறும்
தான் மறையும் மேன்மைச் சதுரன் எவன் வான் மறையா
113. முன்னை மறைக்கும் முடிப் பொருள் என்று ஆய்பவர்க்கும்
தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர்
114. சித்தத்தில் சுத்த சிதாகாசம் என்று ஒரு சித்.
சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என
115. யாவர் இருந்தார் அவர் காண வீற்றிருக்கும்
தேவர் புகழ் தலைமைத் தேவன் எவன் யாவர்களும்
116. இ_வணத்தன் இ_இடத்தன் இ_இயலன் என்று அறியாச்
செவ்வணத்தனாம் தலைமைத் தேவன் எவன் மெய்_வணத்தோர்-
117. தாம் வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ
நாம் வாழத் தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழச்
118. சார் உருவின் நல் அருளே சத்தியாய் மெய் அறிவின்
சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும்
119. ஒன்று என்று உணர உணர்த்தி அடியர் உளம்
சென்று அங்கு அமர்ந்து அருளும் தேவன் எவன் என்றென்றும்
120. தன் சகசம் என்றே சமயம் சமரசமாம்
சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர்
121. பொய் விட்டு மெய் நெறியைப் போற்றித் தற்போதத்தைக்
கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட
122. தீப் போல் கனலும் செருக்கு அறவே செங்கமலப்
பூப் போலும் தன் தாள் புணை பற்றிக் காப்பாய
123. வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்பக்
கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை
124. என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி
அன்பு உருகி அன்பு உருவம் ஆகிப் பின் வன்பு அகன்று
125. புண்ணியா திங்கள் புரி சடையாய் பொன் இதழிக்
கண்ணியா எங்கள் களைகண்ணே எண்ணியாங்கு
126. அன்பர்க்கு அருளும் அரசே அமுதே பேர்_
இன்பக் கடலே எமது உறவே மன் பெற்று
127. மாற்று உரையாப் பொன்னே மணியே எம் கண்மணியே
ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால்
128. உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின்
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறித் தெள் ஊறும்
129. வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல்
தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார்
130. மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப் பொன்
நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து
131. ஆர்த்தியாய்த் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_
மூர்த்தியாய் நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற
132. ஈண்டு அற்புத வடிவாய் எத் தேவரேனும் நின்று
காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்றுப்
133. பூமி எங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்பும் இட்ட
காமியங்கள் ஈயும் கணேசன் எவன் நாம் இயங்க
134. ஏண வரும் இடையூறு எல்லாம் அகற்றி அருள்
காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும்
135. முந்து அ மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்
தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம்
136. வாது அகற்றி உண்மை மரபு அளித்து வஞ்ச மலக்
கோது அகற்றும் நெஞ்சக் குகேசன் எவன் தீது அகற்றித்
137. தங்கும் உலகங்கள் சாயாமல் செம் சடை மேல்
கங்கை-தனைச் சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும்
138. கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற
பாம்பு ஆபரணப் பரமன் எவன் கூம்பாது
139. போற்று உரைத்து நிற்கும் புனிதன் மேல் வந்த கொடும்
கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு
140. வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்தி முதல்
ஐயைந்து மூர்த்தி எனும் ஐயன் எவன் ஐயம் தீர்
141. வல்லார் சொல் வண்ணம் எந்த வண்ணம் அந்த வண்ணங்கள்
எல்லாம் உடைய இதத்தன் எவன் எல்லார்க்கும்
142. தாம் தலைவர் ஆகத் தம் தாள் தொழும் எத் தேவர்க்கும்
ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள்
143. எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும்
அங்கங்கு இருந்து அளிக்கும் அண்ணல் எவன் புங்கம் மிகும்
144. அண்ணல் திரு_மலர்க் கை ஆழி பெறக் கண் இடந்த
கண்ணற்கு அருளிய முக்கண்ணன் எவன் மண்ணிடத்தில்
145. ஓயாது சூல் முதிர்ந்த ஓர் பெண்-தனக்காகத்
தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக
146. வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்
தால் பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தைத்
147. தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்குத்
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு
148. சம்பு நறும் கனியின்-தன் விதையைத் தாள் பணிந்த
சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில்
149. ஆண்டவன் என்று ஏத்தப் பொன்_அம்பலத்தில் ஆனந்தத்
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய
150. முத்துச் சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு
முத்தைத் தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு
151. நா ஒன்று அரசர்க்கு நாம் தருவேம் நல்லூரில்
வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று
152. நல் தொண்டர் சுந்தரரை நாம் தடுக்க வந்தமையால்
வன் தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் நல் தொண்டின்
153. காணிக்கையாகக் கருத்து அளித்தார்-தம் மொழியை
மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும்
154. தன் அன்பர் தாம் வருந்தில் சற்றும் தரியாது
மன் அன்பர் உள் அளிக்கும் வள்ளல் எவன் முன் அன்பில்
155. சால்பு உடைய நல்லோர்க்குத் தண் அருள்தந்து ஆட்கொள ஓர்
மால் விடை மேல் வந்து அருளும் வள்ளல் எவன் மால் முதலோர்
156. தாம் அலையா வண்ணம் தகை அருளி ஓங்கு வெள்ளி
மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே
157. நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாட அரிதாம்
செம்மைக் கதி அருள் நம் தெய்வம் காண் எம்மையினும்
158. நாடக் கிடைத்தல் நமக்கு அன்றி நான்முகற்கும்
தேடக் கிடையா நம் தெய்வம் காண் நீடச் சீர்
159. நல் வந்தனை செய்யும் நம்_போல்வார்க்கு ஓர் ஞானச்
செல்வம் தரும் நமது தெய்வம் காண் சொல் வந்த
160. எண்மை பெறும் நாம் உலகில் என்றும் பிறந்து இறவாத்
திண்மை அளித்து அருள் நம் தெய்வம் காண் வண்மையுற
161. முப்பாழ் கடந்த முழுப் பாழுக்கு அப்பாலைச்
செப்பாது செப்புறும் நம் தேசிகன் காண் தப்பாது
162. தீரா இடும்பைத் திரிபு என்பது யாதொன்றும்
சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது
163. நித்தம் தெரியா நிலை மேவிய நமது
சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என
164. யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இ உலகம்
தீது என்று அறிவித்த தேசிகன் காண் கோது இன்றி
165. ஓசை பெறு கடல் சூழுற்ற உலகில் நம்மை
ஆசையுடன் ஈன்ற அப்பன் காண் மாசு உறவே
166. வன்பாய் வளர்க்கின்ற மற்றையர் போல் அல்லாமல்
அன்பாய் நமை வளர்க்கும் அப்பன் காண் இன்பு ஆக
167. இப் பாரில் சேயார் இதயம் மலர்ந்து அம்மை
அப்பா எனும் நங்கள் அப்பன் காண் செப்பாமல்
168. எள்ளித் திரிந்தாலும் இந்தா என்று இன் அமுதம்
அள்ளிக் கொடுக்கும் நமது அப்பன் காண் உள்ளிக்கொண்டு
169. இன்றே அருள்வாய் எனத் துதிக்கில் ஆங்கு நமக்கு
அன்றே அருளும் நமது அப்பன் காண் நன்றே முன்
170. காதரவு செய்து நலம் கற்பித்துப் பின் பெரிய
ஆதரவு செய்யும் நங்கள் அப்பன் காண் கோதுறும் மா
171. வஞ்ச மலத்தால் வருந்தி வாடுகின்ற நம்-தமையே
அஞ்சல்அஞ்சல் என்று அருளும் அப்பன் காண் துஞ்சல் எனும்
172. நச்சென்ற வாதனையை நாளும் எண்ணி நாம் அஞ்சும்
அச்சம் கெடுத்து ஆண்ட அப்பன் காண் நிச்சலும் இங்
173. கே இரவும்_எல்லும் எளியேம் பிழைத்த பிழை
ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா
174. முன்னம் எடுத்து அணைத்து முத்தமிட்டுப் பால் அருத்தும்
அன்னையினும் அன்பு உடைய அப்பன் காண் மன் உலகில்
175. வன்மை அறப் பத்து மாதம் சுமந்து நமை
நன்மை தரப் பெற்ற நற்றாய் காண் இம்மை-தனில்
176. அன்றொருநாள் நம் பசி கண்டு அந்தோ தரியாது
நன்று இரவில் சோறு அளித்த நற்றாய் காண் என்றும் அருள்
177. செம்மை இலாச் சிறிய தேவர்கள்-பால் சேர்க்காது
நம்மை வளர்க்கின்ற நற்றாய் காண் சும்மை என
178. மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும்
நாளும் பொறுத்து அருளும் நற்றாய் காண் மூளுகின்ற
179. வன் நெறியில் சென்றாலும் வா என்று அழைத்து நமை
நல் நெறியில் சேர்க்கின்ற நற்றாய் காண் செந்நெறியின்
180. நாம் தேடா முன்னம் நமைத் தேடிப் பின்பு தனை
நாம் தேடச்செய்கின்ற நற்றாய் காண் ஆம்-தோறும்
181. காலம் அறிந்தே கனிவோடு நல் அருள்_பால்
ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய் காண் சால உறு
182. வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும்
நம் பசியும் தீர்த்து அருளும் நற்றாய் காண் அம்புவியில்
183. வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம்
நல் நீரில் ஆட்டுகின்ற நற்றாய் காண் எந்நீரின்
184. மேலாய் நமக்கு வியன் உலகில் அன்பு உடைய
நாலாயிரம் தாயில் நற்றாய் காண் ஏலாது
185. வாடி அழுதால் எம் வருத்தம் தரியாது
நாடி எடுத்து அணைக்கும் நற்றாய் காண் நீடு உலகில்
186. தான் பாடக் கேட்டுத் தமியேன் களிக்கும் முன்னம்
நான் பாடக் கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும்
187. ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனைத் தந்து நமக்கு
ஆன மணம்செய்விக்கும் அம்மான் காண் தேனினொடும்
188. இன் பால் அமுதாதி ஏக்கமுற இன் அருள் கொண்டு
அன்பால் விருந்து அளிக்கும் அம்மான் காண் வன் பாவ
189. ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்துச்
சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால்
190. இன்பம் எனைத்தும் இது என்று அறியா நம்
துன்பம் துடைக்கும் துணைவன் காண் வன் பவமாம்
191. தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்குத்
தூ நெறியைக் காட்டும் துணைவன் காண் மா நிலத்தில்
192. இன்று தொட்டது அன்றி இயற்கையாய் நம்-தமக்குத்
தொன்றுதொட்டு வந்த அருள் சுற்றம் காண் தொன்றுதொட்டே
193. ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த
நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என
194. வாங்காது நாமே மறந்தாலும் நம்மை விட்டு
நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக
195. ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா என அருளை
நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில்
196. புல்லென்ற மாயையிடைப் போம்-தோறும் நம்மை இங்கு
நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என்
197. உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு
நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து
198. வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும்
நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலாப்
199. பார் நின்ற நாம் கிடையாப் பண்டம் எது வேண்டிடினும்
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன்
200. ஆர்ந்த நமக்கு இவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிகத்
201. தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றிக்
கோபம்செயா நமது கோமான் காண் பாபம் அற
202. விள்ளும் இறை நாம் அன்பு மேவல் அன்றி வேற்று அரசர்
கொள்ளும் இறை வாங்கா நம் கோமான் காண் உள்ளமுற
203. உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே
கொண்டு நமக்கு இங்கு அளிக்கும் கோமான் காண் மண்டலத்தில்
204. ஒன்றாலும் நீங்காது உகங்கள் பலபலவாய்ச்
சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி
205. நாடி வைக்கும் நல் அறிவோர் நாளும் தவம் புரிந்து
தேடிவைத்த நம்முடைய செல்வம் காண் மாடு இருந்து
206. நாம் எத்தனை நாளும் நல்கிடினும் தான் உலவாச்
சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண்
207. ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது
ஓங்கு அருளால் நம்மை உடையவன் காண் ஆங்கு அவன்றன்
208. கங்கைச் சடை அழகும் காதல் மிகும் அச் சடை மேல்
திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல்
209. சார்ந்து இலங்கும் கொன்றை மலர்த் தார் அழகும் அத் தார் மேல்
ஆர்ந்து இலங்கும் வண்டின் அணி அழகும் தேர்ந்தவர்க்கும்
210. நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும்
போக்கு அரிய நல் நுதலில் பொட்டு அழகும் தேக்கு திரி
211. புண்டரத்தின் நல் அழகும் பொன் அருள்-தான் தன் எழிலைக்
கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம்
212. நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த
நாசித் திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற
213. முல்லை முகையாம் முறுவல் அழகும் பவள
எல்லை வளர் செவ் இதழ் அழகும் நல்லவரைத்
214. தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க
வா என்று அருளும் மலர் வாய அழகும் பூ ஒன்றும்
215. கோன் பரவும் சங்கக் குழை அழகும் அன்பர் மொழித்
தேன் பரவும் வள்ளைச் செவி அழகும் நான் பரவி
216. வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது
கேட்டு அருளும் வார் செவியின் கேழ் அழகும் நாட்டில் உயர்
217. சைவம் முதலாய்த் தழைக்க அருள் சுரக்கும்
தெய்வ முகத்தின் திரு அழகும் தெய்வ முகத்து
218. உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிரக்
கொள்ளும் கருணைக் குறிப்பு அழகும் உள் அறிவின்
219. எள்ளாத மேன்மை உலகு எல்லாம் தழைப்ப ஒளிர்
தெள் ஆர் அமுதச் சிரிப்பு அழகும் உள் ஓங்கும்
220. சீல அருளின் திறத்துக்கு இலச்சினையாம்
நீல மணி மிடற்றின் நீடு அழகும் மால் அகற்றி
221. வாழ்ந்து ஒளிரும் அன்பர் மனம் போலும் வெண் நீறு
சூழ்ந்து ஒளிகொண்டு ஓங்கு திருத் தோள் அழகும் தாழ்ந்திலவாய்த்
222. தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உறக் கூவும் ஒரு
மான் ஓங்கும் செங்கை மலர் அழகும் ஊன் ஓங்கும்
223. ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர் மழுவைக்
காணவைத்த செங்கமலக் கை அழகும் நாணமுற்றே
224. ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம்
வாங்கும் அபய மலர் அழகும் தீங்கு அடையாச்
225. சீர் வரவும் எல்லாச் சிறப்பும் பெறவும் அருள்
சார் வரத ஒண் கைத்தலத்து அழகும் பேர் அரவப்
226. பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணித் தார்
மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர்
227. மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரமத்
தோல் உடுத்த ஒண் மருங்கில் துன் அழகும் பால் அடுத்த
228. கேழ்க் கோலம் மேவு திருக் கீள் அழகும் அக் கீளின்
கீழ்க் கோவணத்தின் கிளர் அழகும் கீழ் கோலம்
229. ஒட்டி நின்ற மெய் அன்பர் உள்ளம் எலாம் சேர்த்துக்
கட்டி நின்ற வீரக் கழல் அழகும் எட்டிரண்டும்
230. சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று
தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து
231. மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய
செல்வத் திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த
232. செம்மை மணி_மலையைச் சேர்ந்த மரகதம் போல்
அம்மை ஒரு பால் வாழ்ந்து அருள் அழகும் அம்ம மிகச்
233. சீர்த்தி நிகழ் செம்பவளச் செம் மேனியின் அழகும்
பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம்
234. கொண்டு இருந்தான் பொன்_மேனிக் கோலம்-அதை நாம் தினமும்
கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து
235. பாட்டால் அவன் புகழைப் பாடுகின்றோர் பக்கம் நின்று
கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல்
236. ஒன்னார் புரம் பொடித்த உத்தமனே என்று ஒரு கால்
சொன்னால் உலகத் துயர் அறும் காண் எந்நாளும்
237. பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால்
உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன்
238. ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன்
நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன்
239. மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலறக் கண்டு திரு_
பாற்கடலை ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின்
240. மத்தியில் நீ கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடையப்
புத்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முத்தி நெறி
241. மாணா அரக்கன் மலைக் கீழ் இருந்து ஏத்த
வாழ்நாள் வழங்கியதோர் வண்மை-தனை நாள்நாளும்
242. நண்ணி உரைத்தும் நயந்திலை நீ அன்பு கொளப்
புண்ணியருக்கு ஈது ஒன்றும் போதாதோ புண்ணியராம்
243. சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான் தெரிக்க
வந்து இரப்புச் சோறு அளித்த வண்மை-தனை முந்து அகத்தில்
244. பேதம் அறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்பு அடையப்
போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய்
245. அங்கு ஓர் எலி-தான் அருந்த அகல் தூண்ட அதைச்
செங்கோலன் ஆக்கிய அச் சீர்த்தி-தனை இங்கு ஓதச்
246. சந்ததம் நீ கேட்டும் அவன் தாள் நினையாய் அன்பு அடையப்
புந்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முந்த வரும்
247. நல் துணை என்று ஏத்தும் அந்த நாவரசர்க்கு அன்று கடல்
கல் துணை ஓர் தெப்பம் எனக் காட்டியதை இற்று என நீ
248. மா உலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடையப்
பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல்
249. கண்_சுமந்தான் அன்பன் கலங்கா வகை வைகை
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனைப் பண்பு_உடையோர்
250. மாண உரைப்பக் கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு
பூண என்றால் ஈது ஒன்றும் போதாதோ நீள் நரகத்
251. தீங்குறும் மா_பாதகத்தைத் தீர்த்து ஓர் மறையவனைப்
பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர்
252. துங்கம் உற உரைத்தும் சூழ்கின்றிலை அன்பு
பொங்க என்றால் ஈது ஒன்றும் போதாதோ தங்கிய இப்
253. பார் அறியாத் தாய் ஆகிப் பன்றி_குருளைகட்கு
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதைச் சீர் அறிவோர்
254. சொல்லி நின்றார் கேட்டும் துதிக்கின்றிலை அன்பு
புல்ல என்றால் ஈது ஒன்றும் போதாதோ நல்ல திருப்
255. பாத_மலர் வருந்தப் பாணன்-தனக்கு ஆளாய்க்
கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர்
256. சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில்
போற்ற என்றால் ஈது ஒன்றும் போதாதோ போற்றுகின்ற
257. ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு
தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும் நீடுகின்ற
258. பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை
ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ
259. வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும்
அன்பு என்பது யாதோ அறியாயே அன்புடனே
260. செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது
அஞ்சு அடக்கி யோகம் அமர்ந்து உலகின் வஞ்சம் அற
261. நாரையே முத்தி இன்பம் நாடியது என்றால் மற்றை
யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய்
262. நீயோ சிறிதும் நினைந்திலை அ இன்பம் என்னை
ஏயோ நின் தன்மை இருந்த விதம் ஓயாத
263. அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான்
நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர்
264. அன்பு அவன் மேல் கொண்டது அறியேன் புறச் சமயத்து
இன்பு_உடையார் ஏனும் இணங்குவரே அன்புடனே
265. தா என்றால் நல் அருள் இந்தா என்பான் நம் பெருமான்
ஆ உன்-பால் ஓதி அலுக்கின்றேன் நீ வன்பால்
266. நின்றாய் அலது அவனை நேர்ந்து நினையாய் பித்தர்
என்றாலும் என் சொற்கு இணங்குவரே குன்றாது
267. பித்தா எனினும் பிறப்பு அறுப்பான் நம்_உடையான்
அத்தோ உனக்கு ஈது அறைகின்றேன் சற்றேனும்
268. கேள்வி_இலார் போல் அதனைக் கேளாய் கெடுகின்றாய்
வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற
269. வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு
ஓலை வரும் கால் இங்கு ஒளிப்பாயே மாலை உறும்
270. இப் பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்குச்
செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அப் பாழில்
271. செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும்
சொல்லாது போய் மயக்கம் தோய்கின்றாய் பொல்லாத
272. அஞ்சு அருந்து என்றால் அமுதின் ஆர்கின்றாய் விட்டிடு என்றால்
நஞ்சு அருந்து என்றால் போல் நலிகின்றாய் வஞ்சகத்தில்
273. ஓடுகின்றாய் மீளாமல் உன் இச்சையின் வழியே
ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் நீடு உலகைச்
274. சூழ்கின்றாய் வேறு ஒன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
வீழ்கின்றாய் மேல் ஒன்றில் மீள்கின்றாய் தாழ்வு ஒன்றே
275. ஈகின்றாய் வன் நெறியில் என்னை வலது அழிக்கப்
போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் யோகு இன்றி
276. ஒன்றை மறைக்கின்றாய் மற்றொன்றை நினைக்கின்றாய் என்
நன்றை மறைக்கின்றாய் நலிகின்றாய் வென்றி பெறும்
277. சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார்
மேவிப் பலவாய் விரிகின்றாய் பாவித்துக்
278. குன்றும் உனக்கு அனந்தம் கோடி தெண்டனிட்டாலும்
ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் நன்று உருகாக்
279. கல் என்பேன் உன்னைக் கரணம் கலந்து அறியாக்
கல் என்றால் என் சொல் கடவாதே புல்ல நினை
280. வல் இரும்பு என்பேன் அந்த வல் இரும்பேல் கூடத்தில்
கொல்லன் குறிப்பை விட்டுக் கோணாதே அல்லல் எலாம்
281. கூட்டுகின்ற வன்மைக் குரங்கு என்பேன் அக் குரங்கேல்
ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர்
282. ஏசுகின்ற பேய் என்பேன் எப் பேயும் அஞ்செழுத்தைப்
பேசுகின்றோர்-தம்மைப் பிடியாதே கூசுகிற்பக்
283. கண்டோரைக் கவ்வுங் கடும் சுணங்கன் என்பன் அது
கொண்டோரைக் கண்டால் குலையாதே அண்டார்க்கும்
284. பூவில் அடங்காப் புலி என்பேன் எப் புலியும்
ஏவில் வயப்பட்டால் எதிராதே நோவு இயற்றி
285. வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும்
ஏறுகின்றோன் சொல் வழி விட்டு ஏறாதே சீறுகின்ற
286. வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும்
மன்னவன் சேர் நாட்டில் வழங்காதே நின்னை இனி
287. என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ
288. போம் வழியும் பொய் நீ புரிவதுவும் பொய் அதனால்
ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும்
289. நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா
நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண்
290. ஏதும் உணர்ந்திலையே இ மாய வாழ்க்கை எனும்
வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ
291. வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று
என்னே அறியாமல் இட்டு அழைத்தேன் கொன்னே நீ
292. நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை
ஆவது அறியாது அழுந்தினையே மேவும் அதில்
293. உள் எரிய மேலாம் உணர்வும் கருக உடல்
நள் எரிய நட்பின் நலம் வெதும்ப விள்வது இன்றி
294. வாடிப் பிலம் சென்று வான் சென்று ஒளித்தாலும்
தேடிச் சுடும் கொடிய தீ கண்டாய் ஓடி அங்கு
295. பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னைச்
சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு
296. சந்தீ என வருவார்-தம்மைச் சுடும் காமஞ்
செந்தீயையும் சுடும் ஓர் தீ கண்டாய் வந்து ஈங்கு
297. மண்ணில் தனைக் காணா வண்ணம் நினைத்தாலும்
நண்ணித் தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற
298. போர் உறும் உள் காமப் புது மயக்கம் நின்னுடைய
பேர்_அறிவைக் கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில்
299. கள் அடைக்கும் காமக் கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர்
முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற
300. ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின்
பேதம் எலாம் ஒன்றிப் பிறப்பிடம் காண் ஆதலினால்
301. வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-
தம் ஆசை இன்னும் தவிர்ந்திலையே இ மாயம்
302. மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள்
என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில்
303. பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம்
எண் என்ற நல்லோர் சொல் எண்ணிலையே பெண் இங்கு
304. மா மாத்திரையின் வருத்தனம் என்று எண்ணினை அ
நாமார்த்தம் ஆசை என நாடிலையே ஆம் ஆர்த்தம்
305. மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம்
தந்திரத்தும் சாயாச் சழக்கு அன்றோ மந்திரத்தில்
306. பேய் பிடித்தால் தீர்ந்திடும் இப் பெண்_பேய் விடாதே செந்
நாய் பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன்
307. ஏழமை என் என்பேன் இவர் மயக்கம் வல் நரகின்
தோழைமை என்று அந்தோ துணிந்திலையே ஊழ் அமைந்த
308. கார்_இருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர் சூழல்
பேர்_இருளில் செல்வதனைப் பேர்த்திலையே பார் இடையோர்
309. எண் வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்
கண் வாள் அறுப்பக் கனிந்தனையே மண் வாழும்
310. ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய் மாதர் முலை
ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே சீரான
311. வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும்
312. சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய் மாதர் இடைச்
சிங்கம் எனில் காணத் திரும்பினையே இங்கு சிறு
313. பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதர் அல்குல்
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டைக்
314. கீழ்க் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல்
பாழ்க் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ்க் கதுவும்
315. கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு
கல்லென்றால் மேல் எழும்பக் கற்றனையே அல் அளகம்
316. மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி
ஐயோ நரைப்பது அறிந்திலையோ பொய் ஓதி
317. ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம்
வெண் பிறை அன்றே அதனை விண்டிலையே கண் புருவம்
318. வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால்
சொல் என்றால் சொல்லத் துணியாயே வல் அம்பில்
319. கண் குவளை என்றாய்க் கண்ணீர் உலர்ந்து மிக
உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு
320. மெய்க் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால்
உய்க் குமிழுஞ் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா
321. வள்ளை என்றாய் வார் காது வள்ளை-தனக்கு உள் புழையோடு
உள்ளும் நரம்பின் புனைவும் உண்டேயோ வெள்ளை நகை
322. முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம்
ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ நல்லதொரு
323. கொவ்வை என இதழைக் கொள்கின்றாய் மேல் குழம்பும்
செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே செவ்விய கண்
324. ணாடி எனக் கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல்
வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர்
325. அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள்
எந்த மதிக்கு உண்டு அதனை எண்ணிலையே நந்து எனவே
326. கண்டம் மட்டும் கூறினை அக் கண்டம் மட்டும் அன்றி உடல்
கொண்ட மட்டும் மற்று அதன் மெய்க் கூறு அன்றோ விண்டு அவற்றைத்
327. தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய் அ வேய்க்கு
மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும்
328. செங்காந்தள் அங்கை எனச் செப்புகின்றாய் அ மலர்க்குப்
பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே மங்காத
329. செவ்விளநீர் கொங்கை எனச் செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு
எ இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே செவ்வை பெறும்
330. செப்பு என்றனை முலையைச் சீசீ சிலந்தி அது
துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே வப்பு இறுகச்
331. சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய் கீழ்த் துவண்டு
வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே தாழ்ந்த அவை
332. மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையாப்
புண் கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே திண் கட்டும்
333. அம் நீர்க் குரும்பை அவை என்றாய் மேல் எழும்பும்
செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே அம் நீரார்
334. கண்ணீர் தரும் பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக
வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மைச்
335. சாடி என்பாய் நீ அயலோர் தாதுக் கடத்து இடும் மேல்
மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை
336. ஆல் இலையே என்பாய் அடர் குடரோடு ஈருளொடும்
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான்
337. உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டுக்
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும்
338. ஆழ் கடல் என்பாய் மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே தாழ் கொடிஞ்சித்
339. தேர் ஆழி என்பாய் அச் சீ_குழியை அன்று சிறு
நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆராப் புன்
340. நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான்
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான்
341. ஆறாச் சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப் புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி
342. மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல்
சீலை இடக் கண்டும் தெரிந்திலையே மேலை உறு
343. மே நரகம் என்றால் விதிர்ப்புறும் நீ மாதர் அல்குல்
கோ நரகம் என்றால் குலைந்திலையே ஊனம் இதைக்
344. கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்
தண்டாது ஒளித்திடவும் சார்ந்தனையே அண்டாது
345. போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய் மற்று அதன்-பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்-
346. தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய் தண்டு ஊன்றி
வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய்
347. ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய் புலால் சிறிதே
வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே சேந்த அடி
348. தண் தாமரை என்றாய் தன்மை விளர்ப்பு அடைந்தால்
வெண் தாமரை என்று மேவுதியோ வண்டு ஆரா
349. மேல் நாட்டும் சண்பகமே மேனி என்றாய் தீ இடும் கால்
தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும்
350. மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது
ஒன்றே ஒரு-புடையாய் ஒத்தது காண் ஒன்றாச் சொல்
351. வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூ
தாள் வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன்
352. காகளமாய் இன் குரலைக் கட்டுரைத்தாய் காலன் என்போன்
காகளம் என்பார்க்கு என் கழறுதியே நாகு அளவும்
353. சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம
சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர்
354. அன்ன நடை என்பாய் அஃது அன்று அருந்துகின்ற
அன்ன நடை என்பார்க்கு என் ஆற்றுதியே அன்னவரை
355. ஓர் ஓவியம் என்பாய் ஓவியமேல் ஆங்கு எழுபத்
தீராயிரம் நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த
356. முன்னும் மலர்க் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி எனத்
துன்னும் உரோமத் துவாரம் உண்டே இன் அமுதால்
357. செய்த வடிவு என்பாய் அச் செய்கை மெய்யேல் நீ அவர்கள்
வைதிடினும் மற்று அதனை வையாயே பொய் தவிராய்
358. ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது
கிள்ளியெடுத்தால் இரத்தம் கீழ் வருமே கொள்ளும் அவர்
359. ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய்ப் பெயர்-தான்
கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர்
360. மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண்
361. வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில்
பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு
362. சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய் வெம் புலிப் பின்
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே சென்றாங்கு
363. நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே ஒன்றாது
364. கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய் கல் அணைத்துக்
கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே பெண்டானார்
365. வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத் தொண்டு
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி
366. மெய்த் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும்
367. மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து
துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே வஞ்சியரைப்
368. பார்த்து ஆடி_ஓடிப் படர்கின்றாய் வெம் நரகைப்
பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே சேர்த்தார் கைத்
369. தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன் பூதம்
தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே நட்டாலும்
370. தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய் தீ விடத்தை
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே செவ் இதழ்_நீர்
371. உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர்
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே கண்டாகக்
372. கவ்வுகின்றாய் அ இதழைக் கார் மதுகம் வேம்பு இவற்றைக்
கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே அ இளையர்
373. மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய்
மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே முன்தானை
374. பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்க அம்பு
பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே கிட்டா மெய்த்
375. தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள் முன்
தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர்
376. வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர்
நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே தாக்கவர்க்காய்த்
377. தேட்டாண்மை செய்வாய் அத் தேட்டாண்மையைத் தெருவில்
போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே வாள் தாரைக்
378. கொண்டாருடன் உணவு கொள்கின்றாய் குக்கலுடன்
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும்
379. இங்கு இவர் வாய்ப் பாகு இலையை ஏற்கின்றாய் புன் மலத்தை
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம்
380. ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர்
381. காட்டாக் குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே கோள் தாவி
382. ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ங் கடலில்
வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே வீழ்ந்தாருள்
383. வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உறக்
காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்குச்
384. செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்
பை கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது
385. கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே எய்யாமல்
386. ஈறு இகந்த இவ்வகையாய் இ மடவார் செய்கை எலாம்
கூறுவனேல் அம்ம குடர் குழம்பும் கூறும் இவர்
387. வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல்
ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர்
388. நன்று அறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்
சென்று அறியார் பேய்க்கே சிறப்பு எடுப்பார் இன்று இவரை
389. வஞ்சம் என்கோ வெவ் வினையாம் வல்லியம் என்கோ பவத்தின்
புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர்
390. வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு
நாள் என்கோ வெய்ய நமன் என்கோ கோள் என்கோ
391. சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆல
காலம் என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில்
392. பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால்
393. பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த
சேயும் இரங்கும் அவர் தீமைக்கே ஆயும் செம்
394. பொன்னால் துகிலால் புனையாவிடில் அவர் மெய்
என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமைக்
395. கொத்து என்ற அ மடவார் கூட்டம் எழுமைக்கும்
வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று
396. பாச வினைக்குள் படுத்துறும் அப் பாவையர் மேல்
ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய்
397. நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை
398. வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில்
எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற
399. பொன்_உடையார் துன்பப் புணரி ஒன்றே அல்லது மற்று
என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால்
400. ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட ஓர்
ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம்
401. வாய்த்தாலும் அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல்
ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது
402. நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது
என்றால் அரகர மற்று என் செய்வாய் நன்றாக
403. ஒன்று ஒரு சார் நில் என்றால் ஓடுகின்ற நீ அதனை
என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய் வென்றியொடு
404. பேர்த்துப் புரட்டிப் பெரும் சினத்தால் மாற்றலர்கள்
ஈர்த்துப் பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்கக்
405. கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி
எய் புகுத்தக் கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும்
406. பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து
என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல்
407. வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல்
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர்
408. உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன்
இன்னே வருவன் அதற்கு என் செய்வாய் முன் ஏதும்
409. இல்லா நமக்கு உண்டோ இல்லையோ என்னும் நலம்
எல்லாம் அழியும் அதற்கு என் செய்வாய் நில்லாமல்
410. ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது
பாய்ந்து ஓடிப் போவது நீ பார்த்திலையே ஆய்ந்தோர் சொல்
411. கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற
சீர்த் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும்
412. நாள்_கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாள் அறியா
ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ்க் கொல்லைப்
413. பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்று அதன் மேல்
இச்சை உனக்கு எவ்வாறு இருந்ததுவே இச்சை_இலார்
414. இட்ட மலம் பட்ட இடம் எல்லாம் பொன்னாம் என்றால்
இட்டம்-அதை விட்டற்கு இசைந்திலையே முட்டு அகற்றப்
415. பொன் நடப்பது அன்றி அது போனகமே ஆதியவாய்
என் அடுத்தது ஒன்றும் இஃது எண்ணிலையே இ நிலத்தில்
416. நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம்
வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து
417. இ செல்வம் இன்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே வெச்சென்ற
418. மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம்
மண்ணால் அழிதல் மதித்திலையே எண்ணாது
419. மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல்
மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட
420. விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_
மண்ணேனும் கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம்
421. என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன்
இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ மன் உலகில்
422. கண்காணியாய் நீயே காணி அல்லாய் நீ இருந்த
மண் காணி என்று மதித்தனையே கண் காண
423. மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை
விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண
424. அந்தரத்தில் நின்றாய் நீ அந்தோ நினைவிட மண்
அந்தரத்தில் நின்றது அறிந்திலையே தந்திரத்தில்
425. மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும்
மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும்
426. வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய்
வீடு என்ற சொல் பொருளை விண்டிலையே நாடு ஒன்றும்
427. மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும்
கண்ணாரக் கட்டு அழிதல் கண்டிலையோ மண்ணான
428. மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப்
பால் வீடும் பாழ் ஆதல் பார்த்திலையோ மேல்_வீட்டில்
429. ஏறுவனே என்பாய் இயமன் கடா மிசை வந்து
ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ
430. மண் அளித்த வேதியனும் மண் விருப்பம்கொள்ளானேல்
எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில்
431. ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்றன்
ஏகாப் பெரும் காமம் என் சொல்கேன் போகாத
432. பாபக் கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளிக்
கோப_கடலில் குளித்தனையே தாபம் உறச்
433. செல்லா இடத்துச் சினம் தீது செல்_இடத்தும்
இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெறத்
434. தன்னைத் தான் காக்கில் சினம் காக்க என்றதனைப்
பொன்னைப் போல் போற்றிப் புகழ்ந்திலையே துன்னி
435. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல என்னும்
திகழ் வாய்மையும் நீ தெளியாய் இகழ்வாரை
436. எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோம் என்று
இவ்வண்ணம் என்னை வெளி இட்டனையே தெவ் என்ன
437. ஓரா வெகுளி_உடையான் தவம் அடையான்
தீராய் என்பார் அதுவும் தேர்ந்திலையே பேரா நின்
438. வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால்
இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய்
439. ஏய்ந்தனை அன்பு ஓர் இடத்தில் இன்னாமை செய்தவரைக்
காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர்
440. எல்லா நலமும் இஃதே என்று ஏத்துகின்ற
கொல்லா நலம் சிறிதும் கொண்டிலையே பொல்லாத
441. வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண்
அன்போடு இரக்கம் அடைந்திலையே இன்பு ஓங்கு
442. தூய்மை என்பது எல்லாம் துணையாய் அணைவது-தான்
வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய்
443. மான் ஒரு கை ஏந்திநின்ற வள்ளல் அன்பர்-தங்களுளே
நான் ஒருவன் என்று நடித்தனையே ஆன மற்றைப்
444. பாதகங்கள் எல்லாம் பழகிப்பழகி அதில்
சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில்
445. ஓயா விகார உணர்ச்சியினால் இ உலக
மாயா விகாரம் மகிழ்ந்தனையே சாயாது
446. நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினைப் பெற்ற
தாய் இளமை எத்தனை நாள் தங்கியதே ஆ இளமை
447. மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார்
கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ மெய் கொடுத்த
448. கூனொடும் கை_கோல் ஊன்றிக் குந்தி நடை தளர்ந்து
கால் நடுங்க நிற்பவரைக் கண்டிலையோ ஊன் ஒடுங்க
449. ஐய நட என்றே அரும் புதல்வர் முன் செலப் பின்
பைய நடப்பவரைப் பார்த்திலையோ வெய்ய நமன்
450. நாடு அழைக்கச் சேனம் நரி நாய் அழைக்க நாறு சுடு
காடு அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த
451. மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து
கை உலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ மெய் உலர்ந்தும்
452. சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ
ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ ஆகாத
453. கண்டம் இது பொல்லாக் கடு நோய் எனும் குமர
கண்டம் இஃது என்பவரைக் கண்டிலையோ கொண்ட உடல்
454. குட்டம் உறக் கை_கால் குறுக்கும் இது பொல்லாத
குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை
455. மாலையினும் காலையினும் மத்தியினும் குத்தும் இது
சூலை என நோவாரைச் சூழ்ந்திலையோ சாலவும் இத்
456. தேகம்-அது நலியச் செய்யும் காண் உய்வு அரிதாம்
மேகம் இஃது என்பாரை மேவிலையோ தாகமுறச்
457. சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு
பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய
458. கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய
மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய
459. முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு
460. எண்_அற்றது உண்டேல் இளமை ஒரு பொருளாய்
எண்ணப்படுமோ என்று எண்ணிலையோ எண்ணத்தில்
461. பொய் என்று அறவோர் புலம்புறவும் இ உடம்பை
மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று
462. கூ கா என மடவார் கூடி அழல் கண்டும்
நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல்
463. பெண்டு இருந்து மாழ்கப் பிணம் கொண்டுசெல்வாரைக்
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே பண்டு இருந்த
464. ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும்
நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக
465. இன்று இருந்தார் நாளைக்கு இருப்பது பொய் என்று அறவோர்
நன்று இருந்த வார்த்தையும் நீ நாடிலையே ஒன்றி
466. உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை
மறம் கருதி அந்தோ மறந்தாய் கறங்கின்
467. நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல்
மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில்
468. இறந்தார் பிறந்தார் இறந்தார் எனும் சொல்
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் இறந்தார்
469. பறை ஓசை அண்டம் படீரென்று ஒலிக்க
மறை ஓசை அன்றே மறந்தாய் இறையோன்
470. புலன் ஐந்தும் என்று அருளும் பொன்மொழியை மாயா
மலம் ஒன்றி அந்தோ மறந்தாய் நிலன் ஒன்றி
471. விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர்
நெக்குருகல் அந்தோ நினைந்திலையே மிக்கு அனலில்
472. நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல்
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின்
473. வாள் கழியச் செங்கதிரோன் வான் கழிய நம்முடைய
நாள் கழிதற்கு அந்தோ நடுங்கிலையே கோள் கழியும்
474. நாழிகை ஓர் நாள் ஆக நாடினையே நாளை ஒரு
நாழிகையாய் எண்ணி நலிந்திலையே நாழிகை முன்
475. நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான்
சென்றார் எனக் கேட்டும் தேர்ந்திலையே பின்றாது
476. தொட்டார் உணவுடனே தும்மினார் அம்ம உயிர்
விட்டார் எனக் கேட்டும் வெட்கிலையே தட்டாமல்
477. உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம்
கொண்டார் எனக் கேட்டும் கூசிலையே வண் தாரார்
478. நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று
சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர்
479. ஊர்ந்தார் தெருவில் உலாப் போந்தார் வான்_உலகம்
சேர்ந்தார் எனக் கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு
480. என்னே இருந்தார் இருமினார் ஈண்டு இறந்தார்
அன்னே எனக் கேட்டும் ஆய்ந்திலையே கொன்னே
481. மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
கருவும் பிதிர்ந்து உதிரக் கண்டாய் கரு ஒன்
482. றொடு திங்கள் ஐயைந்தில் ஒவ்வொன்றில் அந்தோ
கெடுகின்றது என்றதுவும் கேட்டாய் படும் இ
483. நிலை முற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் பலனுற்றே
484. கா என்று வீழ்ந்து அக் கணமே பிணமாகக்
கோ என்று அழுவார் குறித்திலையோ நோவு இன்றிப்
485. பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே
காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ மேல் உவந்து
486. பெற்றார் மகிழ்வு எய்தப் பேசி விளையாடும் கால்
அற்று ஆவி போவது அறிந்திலையோ கற்று ஆயப்
487. பள்ளி இடும் கால் அவனைப் பார நமன் வாயில்
அள்ளி இடும் தீமை அறிந்திலையோ பள்ளி விடும்
488. காளைப் பருவம்-அதில் கண்டார் இரங்கிட அ
ஆளைச் சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண
489. மாப்பிள்ளை ஆகி மணம் முடிக்கும் அன்று அவனே
சாப்பிள்ளை ஆதல் எண்ணிச் சார்ந்திலையே மேல் பிள்ளை
490. மாடை ஏர்ப் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம்
பாடை மேல் சேர்தலினைப் பார்த்திலையோ வீடல் இஃது
491. இக் கணமோ மேல் வந்திடும் கணமோ அன்றி மற்றை
எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல்
492. கூடு என்கோ இ உடம்பைக் கோள் வினை நீரோட்டில் விட்ட
ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ
493. பாழ் என்கோ ஒன்பது வாய்ப் பாவை என்கோ வன் பிறவி
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின்
494. பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும
காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார்
495. மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ
பொய் என்கோ மாயப் பொடி என்கோ மெய் என்ற
496. மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர்
அங்கு அவற்றை எண்ணாது அலைந்தனையே தங்கு உலகில்
497. மற்று இதனை ஓம்பி வளர்க்க உழன்றனை நீ
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே அற்றவரை
498. இக் கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு எனக் கேட்டும்
முக்கட்டும் தேட முயன்றனையே இக் கட்டு
499. மண்பட்டு வெம் தீ மரம் பட்டிடக் கண்டும்
வெண்பட்டு உடுக்க விரைந்தனையே பண்பட்ட
500. ஐயா அரைநாண் அவிழும் எனக் கேட்டு நின்றும்
மெய் ஆபரணத்தின் மேவினையே எய்யாமல்
501. காதில் கடுக்கன் கழற்றும் எனக் கேட்டு நின்றும்
ஏதில் பணியினிடத்து எய்தினையே தாதிற்குத்
502. துற்கந்தமாகச் சுடும் கால் முகர்ந்திருந்தும்
நற்கந்தத்தின்-பால் நடந்தனையே புற்கென்ற
503. வன் சுவைத் தீ நாற்றம் மலமாய் வரல் கண்டும்
இன் சுவைப் பால் எய்தி இருந்தனையே முன் சுவைத்துப்
504. பாறு உண்ட காட்டில் பலர் வெந்திடக் கண்டும்
சோறு உண்டு இருக்கத் துணிந்தனையே மாறுண்டு
505. கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு
சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர்
506. நல் வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
இல் வாழ்வை மெய் என்று இருந்தனையே சொல் ஆவி
507. ஈன்றோன்-தனை நாளும் எண்ணாமல் இ உடம்பை
ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள்
508. நொந்தால் உடன் நின்று நோவார் வினைப் பகை-தான்
வந்தால் அது நீக்க வல்லாரோ வந்து ஆட
509. லுற்ற சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார் தென் திசை வாழ்
மற்று அவன் வந்தால் தடுக்க வல்லாரோ சிற்றுணவை
510. ஈங்கு என்றால் வாங்கி இடுவார் அருள் அமுதம்
வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ தீங்கு அகற்றத்
511. தூண்டா மனை ஆதிச் சுற்றம் எலாம் சுற்றியிட
நீண்டாய் அவர் நல் நெறித் துணையோ மாண்டார் பின்
512. கூடி அழத் துணையாய்க் கூடுவார் வல் நரகில்
வாடி அழும் போது வருவாரோ நீடிய நீ
513. இச் சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ
சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இச் சீவர்
514. நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன்
இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின்
515. எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு
எத்தனையோ தேகம் எடுத்தனையே அத்தனைக்கும்
516. அவ்வவ் இடங்கள்-தொறும் அவ்வவரை ஆண்டாண்டு இங்கு
எவ்வெவ் விதத்தால் இழந்தனையோ அவ்விதத்தில்
517. ஒன்றேனும் நன்றாய் உணர்ந்து இருத்தியேல் இவரை
இன்றே துறத்தற்கு இசையாயோ நின்றோரில்
518. தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர்
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில்
519. ஏங்குவரே என்றாய் இயமன் வரின் நின் உயிரை
வாங்கி முடியிட்டு அகத்தில் வைப்பாரோ நீங்கி இவண்
520. உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-
521. தன் மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில்
என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும்
522. நட்பு அமைந்த நல் நெறி நீ நாடா வகை தடுக்கும்
உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே நட்பு_உடையாய்
523. எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால்
இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல்
524. எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்-
தம் பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர்
525. அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் அப் பொன்மொழியை
மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்குக்
526. கல் பனையில் காய்ப்பு உளதாய்க் காட்டும் பிரபஞ்சக்
கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம்
527. தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றிக் கெடும் மாயா
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும்
528. ஆடகத்தில் பித்தளையை ஆலித்திடும் கபட
நாடகத்தை மெய் என்று நம்பினையே நீடு அகத்தில்
529. காய வித்தையால் அக் கடவுள் இயற்றும் இந்த
மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை
530. இப் படக மாயை இருள் தமமே என்னும் ஒரு
முப்படகத்து உள்ளே முயங்கினையே ஒப்பு இறைவன்
531. ஆன ஒளியில் பரையாம் ஆதபத்தினால் தோன்றும்
கானலினை நீராய்க் களித்தனையே ஆன கிரி
532. யா சத்தி என்றிடும் ஓர் அம்மை விளையாட்டு எனும் இப்
பாசத்தின் உள்ளே படர்ந்தனையே நேசத்தின்
533. பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை
மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும்
534. ஈட்டு நின்ற லீலாவினோதம் எனும் கதையைக்
கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற
535. காலத்தை வீணில் கழிக்கும்படி மேக
சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே சாலத்தில்
536. கண்மை அகன்று ஓங்கும் அந்தகாரத்தில் செம்மாப்புற்று
உண்மை ஒன்றும் காணாது உழன்றனையே வண்மை_இலாய்
537. இங்கு நினைப் பெரியோர் என் நினைப்பார் ஏமாப்பில்
கங்குலினைப் பகலாய்க் கண்டனையே தங்குறும் இத்
538. தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ
மோகாதிக்கு உள்ளே முயல்கின்றாய் ஓகோ நும்
539. கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்குப்
பூ முடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும்
540. வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும்
வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும்
541. விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய்
உண்டு உறங்குகின்றோரை ஒத்தனையே தொண்டு உலகம்
542. கான முயல்_கொம்பாய்க் கழிகின்றது என்கின்றேன்
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர்
543. வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை
கொள்ளத் திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு
544. கண்டன எல்லாம் நிலையாக் கைதவம் என்கின்றேன் நீ
கொண்டு அவை முன் சேரக் குறிக்கின்றாய் உண்டு அழிக்க
545. ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும்
546. தத்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற
சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே பல் பகலும்
547. உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்
கண்டனவே கண்டு களிக்கின்றாய் கொண்டனவே
548. கொண்டு இயங்குகின்றாய் குறித்தனவே பின் குறித்துப்
பண்டு அறியார் போலப் படர்கின்றாய் பண்டு அறிந்து
549. சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்று இதனை
நல்லோர்கள் கண்டால் நகையாரோ செல்லான
550. காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_
காலம் மற்றும் அத் திறமே காண்குவையேல் சாலவும் உன்
551. போது செலா முன்னம் அனுபூதியை நீ நாடாமல்
யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும்
552. வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல
ஆணவத்தினாலே அழிந்தனையே ஆணவத்தில்
553. நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை
நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல்
554. ஊன் நின்ற ஒன்றின் உளவு அறியாய் அந்தோ நீ
நான் என்று சொல்லி நலிந்தனையே நான் என்று
555. சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்று ஒரு நீ
அல்லல் உறும் காலத்து அறை கண்டாய் அல்ல எலாம்
556. நீ இங்கே நான் அங்கே நிற்க நடுவே குதித்தால்
நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு
557. ஒன்று எடுக்கச் சென்று மற்றை ஒன்று எடுக்கக் காண்கின்றேன்
இன்று அடுத்த நீ எங்கு இருந்தனையே மன்று அடுத்த
558. தாள் ஆதரித்தே நின்றன்னை மறந்து உய்யாது
வாளா மதத்தின் மலிகின்றாய் கேளாய் இச்
559. சார்பில் ஒன்று விட்டு ஒழிந்தால் சால மகிழ்கிற்பேன் நான்
சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும்
560. தூ என்று நான் இவணம் சும்மா இருந்தாலும்
வா என்று எனையும் வலிக்கின்றாய் ஓ உன்றன்
561. சூழ்ச்சி அறியேன் நீ சுழல்கின்ற போது எல்லாம்
சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் நீட்சியில் நீ
562. கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன்
மால் அசைத்த நின் புணர்ப்பின் வாறு எதுவோ ஆலும் அண்டக்
563. கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும்
ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில்
564. சுற்றுண்ட நீ கடலில் தோன்று சுழி ஆக அதில்
எற்றுண்ட நான் திரணம் என்கேனோ பற்றிடும் நீ
565. சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும்
அங்கண் சருகு என்று அறைகேனோ பொங்குற்ற
566. சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும்
நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ
567. துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின்
உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ
568. பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அப் பருந்தின்
நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா
569. நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால்
என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ
570. ஆனால் எளியேனுக்கு ஆகாப் பொருள் உளவோ
வான்_நாடர் வந்து வணங்காரோ ஆனாமல்
571. எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்
கண்_நுதலும் அங்கைக் கனி அன்றோ எண்ணுமிடத்து
572. என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல்
கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும்
573. சிந்தோடும் ஓர் வடவைத் தீயும் கரத்து அடைப்பர்
அந்தோ உனை யார் அடக்குவரே வந்து ஓடும்
574. கச்சோதம் என்னக் கதிரோன்-தனை எடுப்பர்
அச்சோ உனை யார் அடக்குவரே வைச்சு ஓங்கு
575. மூவுலகும் சேர்த்து ஒரு தம் முன்தானையின் முடிவர்
ஆ உனையும் இங்கு ஆர் அடக்குவரே மேவு பல
576. தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம்
வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய
577. போகம் என்றும் மற்றைப் புலன் என்றும் பொய் அகலா
யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும்
578. வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும்
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற
579. சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய
580. அண்டம் என்றும் அண்டத்து அசைவும் அசைவும்_அலாப்
பண்டம் என்றும் சொல்ப எலாம் பன்முகங்கள் கொண்டு இருந்த
581. உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப
எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும்
582. தந்தோன் எவனோ சதுமுகன் உண்டு என்பார்கள்
அந்தோ நின் செய்கை அறியாரே அந்தோ நான்
583. ஆம் என்றால் மற்று அதனை அல்ல என்பாய் அல்ல என்றால்
ஆம் என்பாய் என்னை அலைக்கின்றாய் நாம் அன்பாய்
584. என்றும் பிறந்து இறவா இன்பம் அடைதும் என்றால்
நன்று என்று ஒருப்படுவாய் நண்ணும் கால் தொன்று எனவே
585. செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமை எலாம்
நல்கிற்பாய் என்னே நின் நட்புடைமை சொல்கிற்பில்
586. ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான்
நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு
587. ஆண் அவலம் பெண் அவலம் ஆகும் பொருள் அவலம்
ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம்
588. ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-
தான் அவலம் என்றால் என் சாற்றுவதே நான் இவணம்
589. இன்பம் எது கண்டேம் மால் இச்சை எலாம் துன்பம் அதில்
துன்பம் பிறப்பு என்றே சோர்கின்றேன் வன்பு உடைய
590. இப் பிறவித் துன்பத்தினும் திதியில் துன்பம்-அது
செப்ப அரிதாம் என்றே திகைக்கின்றேன் செப்பு இறப்பின்
591. ஓயாத துன்பம் உரைக்க உடம்பு எல்லாம்
வாயாகினும் போதமாட்டாதேல் ஏஏ நாம்
592. செய்வது என்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம் நான்
நைவது எல்லாம் கண்டு நடந்தனையே கைவரும் இ
593. இல்லிக் குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான்
சொல்லித் திரிந்தும் எனைச் சூழ்ந்திலையே வல் இயமன்
594. நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களில் எ
வேளையோ தூதுவிடில் அவர்கள் கேள் ஐயோ
595. நல்லோம் எனினும் நடவார் நடவார் நாம்
செல்லோம் எனினும் அது செல்லாதே வல்லீர் யாம்
596. இன் சொலினோம் இன்று இங்கு இருந்து வருவோம் என யாம்
என் சொலினும் அச் சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடைத்
597. தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று
நாம் அறைவோம் என்றல் நடவாதே நாம் இவணம்
598. அ நாள் வரும் முன்னர் ஆதி அருள் அடையும்
நல் நாள் அடைதற்கு நாடுதும் காண் என்னா நின்று
599. ஓதுகின்றேன் கேட்டும் உறார் போன்று உலகியலில்
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் தீது நன்றோடு
600. ஏற்ற அடி_நாள் உறவாம் என்னை விட்டுத் தாமதமாம்
நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த
601. தாமதமே ஓர் அவித்தை தாமதமே ஆவரணம்
தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று
602. ஐயோ ஒரு நீ அதனோடு கூடினையால்
பொய்யோ நாம் என்று புகன்றதுவே கையாமல்
603. ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால்
என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின்
604. தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய்ப் பிரமன்
போது எல்லாம் சொல்லிடினும் போதாதே ஆதலினால்
605. வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம்
செய்கின்றாய் ஈது ஓர் திறம் அன்றே உய்கிற்பான்
606. வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை
நாடுகின்றாய் ஈது ஓர் நலம் அன்றே கூடுகின்ற
607. ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல்
நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ
608. மற்றவர் போல் அன்றே மனனே நின் வண் புகழை
முற்றும் இவண் ஆர்-தான் மொழிவாரே சுற்றி மனம்
609. தான் அடங்கின் எல்லாச் சகமும் அடங்கும் ஒரு
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க
610. எல்லா நலமும் இதனால் என மறைகள்
எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும்
611. மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று
ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த
612. நன்மை பெறும் மேன்மை நண்ணிய நீ நின்னுடைய
தன்மை விடல் அந்தோ சதுர் அல இப் புன்மை எலாம்
613. விட்டு ஒழித்து நான் மொழியும் மெய்ச் சுகத்தை நண்ணுதி நீ
இட்டு இழைத்த அச் சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த
614. வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற
மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய்
615. போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய்
616. போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து
நாதம் சுகம் என்றும் நாம் பொருள் என்று ஓதல் அஃது
617. ஒன்றே சுகம் என்றும் உள் கண்டிருக்கும் அந்த
நன்றே சுகம் என்றும் நாம் புறத்தில் சென்றே கண்டு
618. ஆற்றல் சுகம் என்றும் அன்பு அறியாச் சூனியமே
ஏற்ற சுகம் என்றும் இவ்வண்ணம் ஏற்றபடி
619. வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே
சொல்லுகின்றோர் சொல்லும் சுகம் அன்று சொல்லுகின்ற
620. வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற
நான் ஆதி மூன்றில் ஒன்றும் நாடாமல் ஆனாமை
621. எள்ளும் பகலும் இரவும் இலா ஓர் இடத்தில்
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் வள்ளல் என
622. வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும்
சூழும் சுகமே சுகம் கண்டாய் சூழ்வு-அதனுக்கு
623. எவ்வாறு இருந்தால் இயலும் எனில் அம்ம
இவ்வாறு இருந்தால் இயலாதால் செவ் ஆற்றில்
624. பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது
பற்று அற்றால் அன்றிப் பலியாதால் பற்று அற்றல்
625. வேதனையால் ஈங்கு விரியும் சகப் பழக்க
வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும்
626. ஈனம் அந்தோ இ உலகம் என்று அருளை நாடுகின்ற
ஞானம் வந்தால் அன்றி நலியாதால் ஞானம்-அது
627. போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய வி
வேகம் உற்றால் அன்றி விளங்காதால் ஆக அஃது
628. உண்ண வந்தால் போலும் இவண் உற்று விசாரித்திடும் ஓர்
எண்ணம் வந்தால் அன்றி இசையாதால் எண்ணம்-அது
629. பங்கம் அடைந்தார் அவையைப் பாராது சாதுக்கள்
சங்கம் அடைந்தால் அன்றிச் சாராதால் இங்கு அதனால்
630. வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியாப்
பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில்
631. பேய் ஆட உள் அறியாப் பித்து ஆட நின்னுடனே
வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடிப்
632. பேதித்திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே
வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்துச்
633. சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான
தெய்வம் எங்கே என்பவரைச் சேர்ந்து உறையேல் உய்வது எங்கே
634. தீராச் சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை
நேராய்ப் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல்
635. எள்ளென்றும் தெய்வம் என்பது இல்லை இது தெளிந்து
கொள் என்றும் துள்ளுகின்றோர் கூட்டம் உறேல் நள் ஒன்று
636. நாம் என்றும் நம்மை அன்றி நண்ணும் பிரமம் இல்லை
யாம் என்றும் சொல்பவர்-பால் ஆர்ந்து உறையேல் தாம் ஒன்ற
637. எல்லா அறிவும் எமது அறிவே என்று உரைக்கும்
பொல்லா வலக்காரர் பொய் உகவேல் புல் ஆக
638. அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியாக் காய_
கற்பமே வத்து என்பார் கண் அடையேல் சிற்சிலவாம்
639. சித்திகளே வத்து என்போர்ச் சேர்ந்து உறையேல் பல் மாயா
சத்திகளே வத்து என்போர் சார்பு அடையேல் பொத்திய இச்
640. சன்மமே தோற்றும் தரமாம் திரம் அளித்த
கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு
641. மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக
யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள்
642. மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார்
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால்
643. மன் உரையாச் சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று
என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள்
644. பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார்
தேற்றார் சிவ_பூசைசெய்யாராய்ப் பூத் தாவி
645. வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய்க்
கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற
646. நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவான் பொன்_அறைக்குத்
தாள்_கோல் இடுவாரைச் சார்ந்து உறையேல் நீள் கோல
647. மெய்_ஒழுக்கத்தார் போல் வெளி நின்று அகத்து ஒழியாப்
பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில்
648. பொய் நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்-பால்
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து
649. கோடாது கோடி கொடுத்தாலும் சைவ நெறி
நாடாதவர் அவையை நண்ணியிடேல் கோடாது
650. கொல்லா விரதம்-அது கொள்ளாரைக் காணில் ஒரு
புல்லாக எண்ணிப் புறம்பு ஒழிக எல்லாமும்
651. ஆக நவில்கின்றது என் நம் ஐயனுக்கு அன்பு_இல்லாரை
நீ கனவிலேனும் நினையற்க ஏகன் அடிக்கு
652. அன்பே வடிவாய் அருளே உயிராய்ப் பேர்_
இன்பே உணர்வாய் இசைந்தாரும் அன்பு ஆகிக்
653. கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய்க்
கொண்டு இகவாச் சார்பு குறித்தாரும் தொண்டுடனே
654. வாய்_மலரால் மாலை வகுத்தலொடு நம் இறைக்குத்
தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன்
655. ஏர் நந்தனப் பணி கண்டு இச்சையுற நம் இறைக்குச்
சீர் நந்தனப் பணிகள் செய்வோரும் நார் நந்தாத்
656. தீயின் மெழுகாச் சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ்
கோயில் மெழுகா நின்ற கொள்கையரும் மேயினரைத்
657. தாயில் வளர்க்கும் தயவு உடைய நம் பெருமான்
கோயில் விளக்கும் குணத்தோரும் தூய அருள்
658. இன்புடனே தீபம் முதல் எல்லாச் சரியைகளும்
அன்புடனே செய்து அங்கு அமர்வாரும் அன்புடனே
659. அண்ணிய மேல் அன்பர்க்கு அமுது ஈதல் ஆதிசிவ
புண்ணியமே நாளும் புரிவோரும் புண்ணியமாம்
660. தேனே அமுதே சிவமே சிவமே எம்மானே
என்று ஏத்தி மகிழ்வாரும் வானான
661. மன்னே அருள்_கடலே மாணிக்கமே எங்கள்
அன்னே என்று உன்னி அமர்வோரும் நல் நேயப்
662. பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்தக்
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில்
663. பண்டு கண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்_மேனி
கண்டுகண்டு நாளும் களிப்போரும் தொண்டு அடையும்
664. பொற்பு அதிகம் என்று எண்ணிப் போற்றி ஒரு மூவர்களின்
சொல் பதிகம் கொண்டு துதிப்போரும் சொற்பனத்தும்
665. மாசு அகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்ற திருவாசகத்தை
வாயால் மலர்வோரும் வாசகத்தின்
666. மன் இசைப்பால் மேலோர் வகுத்து ஏத்திநின்ற திரு
இன் இசைப்பா ஆதி இசைப்போரும் மன் இசைப்பின்
667. நல் வாழ்வு அருளுகின்ற நம் பெருமான் மான்மியங்கள்
சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் சொல் வாய்ந்த
668. தாதா என்று அன்புடனே சாமகீதங்கள் முதல்
வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம்
669. சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று
தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி
670. நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன்
671. அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான்
அஞ்செழுத்தால் அர்ச்சித்து அமர்வோரும் அஞ்சு எனவே
672. விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான்
செம் சுந்தரப் பதத்தில் சேர்த்தோரும் வஞ்சம் செய்
673. பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை
நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை
674. நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான்
ஆடல் அடித் தியானம் ஆர்ந்தோரும் வாடல் அறத்
675. தூய நனவில் சுழுத்தியொடு நம் பெருமான்
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு
676. மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கித் தான் அற்றுத்
தான் அதுவாய் நிற்கும் தகையோரும் வானம்-அதில்
677. வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான்
தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு
678. தாழ் சடையும் நீறும் சரி கோவணக் கீளும்
வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய
679. வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள்
ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்கத்
680. தஞ்சம் தரும் மலரோன் தத்துவமாம் பூதங்கள்
அஞ்சும் பொறி அஞ்சும் அஞ்சு அறிவும் அஞ்சு எனும் ஓர்
681. வாக்கு முதல் அஞ்சும் அற்று மாலோன்-தன் தத்துவமாம்
ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால்
682. மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாதம் மட்டும்
தாவி வயங்கு சுத்த தத்துவத்தில் மேவி அகன்று
683. அப்பால் அருள் கண்டு அருளால் தமைத்தாம் கண்டு
அப்பால் பரவெளி கண்டு அப்பாலுக்கப்பாலும்
684. தீராச் சுயமாய்ச் சிதானந்தமாம் ஒளியைப்
பாரா இருந்தபடி இருந்து பேராது
685. கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து
கொண்ட சிவயோகியராம் கொற்றவரும் அண்ட அரிய
686. சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய்க் கொண்டு பரதத்துவத்தின்
நிற்கும் தகவோரும் அத்துவத்தில்
687. தீதும் சுகமும் சிவன் செயல் என்று எண்ணி வந்த
யாதும் சமமா இருப்போரும் கோதுபடக்
688. கூறும் குறியும் குணமும் குலமும் அடி
ஈறும் கடையும் இகந்தோரும் வீறுகின்ற
689. சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்கச் சேர் சித்த
சாந்தியுடனே சரிப்போரும் சாந்தி பெறத்
690. தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல்
செம்மையுடன் வாழும் திறலோரும் எம்மையினும்
691. ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின்
நீராக நீந்தி நிலைத்தோரும் சேராது
692. தம் பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்
செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய்த்
693. தாயர் என மாதர்-தம்மை எண்ணிப் பாலர் பித்தர்
பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில்
694. எய்ப் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க
மெய்ப் பரிசம் செய்ய வல்ல வித்தகரும் மெய்ப்படவே
695. யாவும் அறிந்தும் அறியார் போன்று எப்பொழுதும்
சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் ஓவல் இன்றி
696. வைதிடினும் வாழ்க என வாழ்த்தி உபசாரம்
செய்திடினும் தன்மை திறம்பாரும் மெய் வகையில்
697. தேறா உலகம் சிவமயமாய்க் கண்டு எங்கும்
ஏறாது இழியாது இருப்போரும் மாறாது
698. மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பர
மானந்தாதீதத்து அமர்ந்தோரும் தாம் நந்தாச்
699. சாதுக்கள் ஆம் அவர்-தம் சங்க மகத்துவத்தைச்
சாதுக்கள் அன்றி எவர்தாம் அறிவார் நீ துக்கம்
700. நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம்
ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ
701. பஞ்சாட்சரத்தைப் பகர் அருளே நாவாக
எஞ்சாப் பரிவுடனே எண்ணி அருள் செஞ்சோதித்
702. தாது ஒன்று தும்பை முடித் தாணு அடி ஒன்றி மற்றை
யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற
703. பாழ் வாழ்வு நீங்கப் பதி வாழ்வில் எஞ்ஞான்றும்
வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து